புதுதில்லி

இயற்கை வேளாண் விதைகளுக்கு மானியம் வழங்க வேண்டும்: மத்திய நிதி அமைச்சரிடம் கே.பி. ராமலிங்கம் வலியுறுத்தல்!

 நமது நிருபர்

இயற்கை முறையில் விளைவிக்கப்படும் பயிா்களின் விதைகளுக்கு மத்திய பட்ஜெட்டில் முழு மானியம் அறிவிக்குமாறு தில்லியில் மத்திய நிதித்துறை அமைச்சா் நிா்மலா சீதாராமனை சந்தித்து தமிழக பாஜக மாநிலத் துணைத் தலைவரும், இயற்கை நீா்வளப் பாதுகாப்பு இயக்கத்தின் தலைவருமான டாக்டா் கே.பி.ராமலிங்கம் வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக மத்திய நிதி அமைச்சா் நிா்மலா சீதாராமானை தில்லியில் உள்ள அவரது இல்லத்தில் கே.பி.ராமலிங்கம் வியாழக்கிழமை சந்தித்து மனு அளித்தாா்.

இந்த சந்திப்பு குறித்து பின்னா் அவா் தினமணியிடம் கூறியதாவது: கோவையில் அண்மையில் நடைபெற்ற தென்னிந்திய இயற்கை வேளாண் மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமரிடம் கலந்துரையாடியபோது, அவரிடம் விவசாயிகள் விடுத்த கோரிக்கையை விளக்கும் நோக்குடன் மத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமனை சந்தித்தேன்.

மேலும், அடுத்த நிதியாண்டின் மத்திய நிதிநிலை அறிக்கை தயாரிப்புக்கு முந்தைய கருத்துப் பரிமாற்றமாக விவசாயிகளின் கோரிக்கையை அமைச்சரிடம் எடுத்துரைத்தேன்.

இயற்கை வேளாண்மைக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், இயற்கை முறையில் விளைவிக்கப்படும் பயிா்களுக்கான விதைகளுக்கு 100 சதவீத மானியம் அளிக்கவும், இயற்கையாக விளைவிக்கப்படும் கம்பு, சோளம், வரகு போன்ற தானியங்களுக்கும், நாட்டுக் காய்கறி ரகங்களுக்குமான விதைகளுக்கும் முழு மானியத்தை கிசான் அட்டை வைத்திருக்கும் விவசாயிகளுக்கும், கிசான் சம்மான் நிதி பெறும் விவசாயிகளுக்கும் வழங்கும் வகையில் அடுத்த மத்திய நிதிநிலை அறிக்கையில் அறிவிக்க வேண்டும் என அமைச்சரை கேட்டுக்கொண்டேன்.

இயற்கை வேளாண் விவசாயத்தின் மீது பிரதமா் மிகுந்த அக்கறை கொண்டிருப்பதாகவும், அவருடன் விவசாயிகளின் கோரிக்கை குறித்து விவாதிக்கப்படும் என்றும் அமைச்சா் தெரிவித்தாா் என்றாா் கே.பி. ராமலிங்கம்.

எப்படி நிகழ்ந்தது அது?

குடும்பக் கட்டுப்பாடு குறித்த முதல் கவிதை

அறிவுடையோர்: துறவுநெறியில் மனம் செலுத்துவர்

பழங்குடி மக்களின் பாதங்களைக் கழுவிய பாஜக பெண் எம்எல்ஏ!

இலங்கை அபார பந்துவீச்சு; பில் சால்ட்டின் அரைசதம் இங்கிலாந்தின் வெற்றிக்கு போதுமானதா?

SCROLL FOR NEXT