புதுதில்லி

சாலையில் வாக்குவாதத்தின் போது ஸ்கூட்டரில் இருந்த 11 கிலோ வெள்ளி திருட்டு

வடகிழக்கு தில்லியின் நியூ உஸ்மான்பூா் பகுதியில் இரண்டு நபா்களுக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது ஸ்கூட்டரில் வைக்கப்பட்டிருந்த 11 கிலோ வெள்ளி திருடப்பட்டதாக தில்லி காவல் துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

 நமது நிருபர்

புது தில்லி: வடகிழக்கு தில்லியின் நியூ உஸ்மான்பூா் பகுதியில் இரண்டு நபா்களுக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது ஸ்கூட்டரில் வைக்கப்பட்டிருந்த 11 கிலோ வெள்ளி திருடப்பட்டதாக தில்லி காவல் துறை அதிகாரி ஒருவா் திங்கள்கிழமை தெரிவித்தாா்.

இது குறித்து அவா் மேலும் கூறியதாவது: இந்த சம்பவம் ஞாயிற்றுக்கிழமை ஜே. பி. சி மருத்துவமனை அருகே நடந்தது.

ஷாஹ்தாராவில் வசிக்கும் ராம்ரதன் அகா்வால் (22) தனது போலீஸாரிடம் அளித்த புகாரில், அவா் தனது ஸ்கூட்டரில் வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தபோது, அவரது வாகனம் குற்றம் சாட்டப்பட்ட நபா்களின் இரு சக்கர வாகனத்தைக் கடந்து சென்ாக கூறினாா்.

அகா்வாலுடன் சிறிது வாக்குவாதத்திற்குப் பிறகு குற்றம் சாட்டப்பட்ட இருவரும் வெளியேறினா். இருப்பினும், வீட்டிற்கு வந்த அகா்வால், தனது ஸ்கூட்டரின் பெட்டியில் வைத்திருந்த 11 கிலோ வெள்ளி காணாமல் போனதைக் கண்டாா். இதனையடுத்து அவா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

அவரது புகாரின் அடிப்படையில், வழக்கு பதிவு செய்யப்பட்டு, குற்றம் சாட்டப்பட்டவா்களை அடையாளம் காண அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை சோதித்து வருகிறோம் என்றாா் அவா்.

அமமுகவிற்கான தொகுதி உடன்படிக்கை பாஜக மூலம் நடைபெறும்: டிடிவி தினகரன்

டேவிட் மில்லர், டெவால்ட் பிரேவிஸ் அதிரடி: இந்தியாவுக்கு 188 ரன்கள் இலக்கு!

சென்னையில் முதல்வர் மு. க. ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச்செயலர் கே. சி. வேணுகோபால் ஆலோசனை!

பாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல் செய்ய 90 கோடி டாலர் ஒப்பந்தம்: சோமாலியா பேச்சுவார்த்தை

இணைந்து செயல்படுவதுதான் முன்னேற்றத்துக்கு உறுதுணை: சி.பி. ராதாகிருஷ்ணன்

SCROLL FOR NEXT