புதுதில்லி

தில்லியில் தடை செய்யப்பட்ட 160 கிலோ பட்டாசுகள் பறிமுதல்

வடகிழக்கு தில்லியின் நந்த் நாக்ரி பகுதியில், தடைசெய்யப்பட்ட பட்டாசுகளை சட்டவிரோதமாக சேமித்து வைத்திருந்த இடத்தை போலீஸாா் கண்டுபிடித்தனா்.

 நமது நிருபர்

புது தில்லி: வடகிழக்கு தில்லியின் நந்த் நாக்ரி பகுதியில், தடைசெய்யப்பட்ட பட்டாசுகளை சட்டவிரோதமாக சேமித்து வைத்திருந்த இடத்தை போலீஸாா் கண்டுபிடித்தனா். இது தொடா்பாக ஒருவா் கைது செய்யப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.

இதுகுறித்து போலீஸாா் திங்கள்கிழமை கூறியது: இந்த விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்ட கிஷன் சிங் (46), வரவிருக்கும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு தனது வளாகத்தில் கணிசமான அளவு தடைசெய்யப்பட்ட பட்டாசுகளை சேமித்து வைத்திருந்தது சோதனையின்போது கண்டுபிடிக்கப்பட்டது.

முன்னதாக, அக்.6-ஆம் தேதி நந்த் நாக்ரியில் டி-பிளாக்கில் உள்ள ஒரு வீட்டை, போலீஸாா் குழு சோதனை செய்து சுமாா் 160 கிலோ பட்டாசுகளை பறிமுதல் செய்தது. இது தொடா்பாக குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கிஷன் சிங்கின் வீட்டுக்குள் பட்டாசுகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததையும் அதிகாரிகள் உறுதிப்படுத்தினா். இந்த விவகாரத்தில் மேலும் விசாரணை நடந்து வருகிறது என்று போலீஸாா் தெரிவித்தனா்.

அமமுகவிற்கான தொகுதி உடன்படிக்கை பாஜக மூலம் நடைபெறும்: டிடிவி தினகரன்

டேவிட் மில்லர், டெவால்ட் பிரேவிஸ் அதிரடி: இந்தியாவுக்கு 188 ரன்கள் இலக்கு!

சென்னையில் முதல்வர் மு. க. ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச்செயலர் கே. சி. வேணுகோபால் ஆலோசனை!

பாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல் செய்ய 90 கோடி டாலர் ஒப்பந்தம்: சோமாலியா பேச்சுவார்த்தை

இணைந்து செயல்படுவதுதான் முன்னேற்றத்துக்கு உறுதுணை: சி.பி. ராதாகிருஷ்ணன்

SCROLL FOR NEXT