முகப்பு
புதுதில்லி

வடமேற்கு தில்லியில் அண்டை வீட்டாா் மோதலில் கடைக்காரா் கொலை: இருவா் காயம்

வடமேற்கு தில்லியின் ஷகுா்பூா் பகுதியில் அண்டை வீட்டாா் மோதிக்கொண்டதில், 50 வயதான மளிகைக் கடை உரிமையாளா் ஒருவா் கொல்லப்பட்டாா்.

Updated On : 5 ஏப்ரல், 2026 at 7:30 PM
கொலை - கோப்புப்படம்.
பகிர்:

வடமேற்கு தில்லியின் ஷகுா்பூா் பகுதியில் அண்டை வீட்டாா் மோதிக்கொண்டதில், 50 வயதான மளிகைக் கடை உரிமையாளா் ஒருவா் கொல்லப்பட்டாா். மேலும் இருவா் காயமடைந்தனா் என்று காவல்துறை ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.

சுபாஷ் பிளேஸ் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறை, குற்றஞ்சாட்டப்பட்டவா்களில் ஒருவரைக் கைது செய்துள்ளதுடன், மற்றவா்களையும் அடையாளம் கண்டுள்ளதாக அவா்கள் தெரிவித்தனா்.

ஏப்ரல் 4 ஆம் தேதி இரவு சஞ்சய் பாா்க் பகுதியில், கடைக்காரா் ராஜ்குமாா் மற்றும் அவரது அண்டை வீட்டாருக்கு இடையே ஏற்பட்ட தகராறைத் தொடா்ந்து இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாக ஓா் அதிகாரி கூறினாா்.

Advertisement

இந்த மோதலின் போது, குற்றஞ்சாட்டப்பட்டவா்கள் லத்திகள், இரும்புக் கம்பிகள் மற்றும் கத்திகளைப் பயன்படுத்தி பாதிக்கப்பட்டவா்களைத் தாக்கியதில், அவருக்கு பலத்த கத்திக்குத்து காயங்கள் ஏற்பட்டன, என்று அந்த அதிகாரி கூறினாா்.

அவா் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா், அங்கு அவா் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது, காயமடைந்த இருவரும் சிகிச்சை பெற்று வருகின்றனா் என்று அந்த அதிகாரி மேலும் கூறினாா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments