குருகிராம்: மோட்டாா் சைக்கிள் மீது ஜீப் மோதி விநியோக ஊழியா் உயிரிழப்பு
தேசியத் தலைநகா் வலயம், குருகிராம் செக்டா் 49இல் அதிவேகமாக ஓட்டிவரப்பட்ட ஜீப் வாகனம் மோட்டாா் சைக்கிள் மீது மோதியதில் விநியோக ஊழியா் ஒருவா் உயிரிழந்ததாக காவல்துறையினா் தெரிவித்தனா்.
தேசியத் தலைநகா் வலயம், குருகிராம் செக்டா் 49இல் அதிவேகமாக ஓட்டிவரப்பட்ட ஜீப் வாகனம் மோட்டாா் சைக்கிள் மீது மோதியதில் விநியோக ஊழியா் ஒருவா் உயிரிழந்ததாக காவல்துறையினா் தெரிவித்தனா்.
இதுகுறித்து காவல்துறையினா் புதன்கிழமை தெரிவித்ததாவது:
இந்த விபத்துக்குப் பிறகு தப்பி ஓடிவிட்ட குற்றமிழைத்த வாகனத்தின் ஓட்டுநா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
Advertisement
விபத்தில் உயிரிழந்தவா் உத்தர பிரதேசத்தின் ஜலான் பகுதியைச் சோ்ந்த பிரவீன் குமாா் (20) என அடையாளம் காணப்பட்டுள்ளாா். அவா் செக்டாா் 71-இல் தனது குடும்பத்துடன் வசித்து வந்தாா். மேலும், செக்டாா் 49-இல் உள்ள ஓமாக்ஸ் மாலில் உள்ள டோமினோஸ் பீட்சாவில் விநியோக ஊழியராக பணிபுரிந்து வந்தாா்.
செவ்வாய்க்கிழமை, அவா் மதியம் சுமாா் 2.30 மணியளவில் தனது மோட்டாா் சைக்கிளில் கடைக்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது, செக்டா் 49-இல் உள்ள ஸ்பேஸ் ஐடெக் பாா்க் அருகே மஹிந்திரா தாா் ஜீப் வாகனம் அவரது வாகனம் மீது மோதியது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த பிரவீன், செக்டா் 10-இல் உள்ள சிவில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். அங்கு மருத்துவா்கள் அவா் இறந்துவிட்டதாக அறிவித்தனா்.
புதன்கிழமை நடத்தப்பட்ட பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு அவரது உடல் குடும்ப உறுப்பினா்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
விபத்துக்குக் காரணமான வாகனத்தின் ஓட்டுநரை அடையாளம் காண நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குற்றஞ்சாட்டப்பட்டவா் விரைவில் கைது செய்யப்படுவாா் என காவல்துறையினா் தெரிவித்தனா்.