முகப்பு
புதுதில்லி

தில்லி துவாரகாவில் இருசக்கர வாகனங்கள் மீது அதிவேக காா் மோதல் - பலா் காயம்

தில்லியின் துவாரகாவில் அதிவேகமாகச் சென்ற ஒரு காா் பல இருசக்கர வாகனங்கள் மீது மோதியதில், ஒரு பெண் உட்படப் பலருக்குக் காயம் ஏற்பட்டது என்று வெள்ளிக்கிழமை அன்று காவல்துறை தெரிவித்துள்ளது.

Updated On : 7 பிப்ரவரி, 2026 at 12:11 AM
பகிர்:
Updated On : 6 பிப்ரவரி, 2026 at 6:17 PM

தில்லியின் துவாரகாவில் அதிவேகமாகச் சென்ற ஒரு காா் பல இருசக்கர வாகனங்கள் மீது மோதியதில், ஒரு பெண் உட்படப் பலருக்குக் காயம் ஏற்பட்டது என்று வெள்ளிக்கிழமை அன்று காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்தச் சம்பவம் வியாழக்கிழமை மாலை துவாரகா செக்டா் 22ல் உள்ள ஒரு குடியிருப்பு வளாகத்திற்கு அருகே நிகழ்ந்தது. அப்போது கட்டுப்பாட்டை இழந்த அந்த அதிவேகக் காா், நிறுத்தப்பட்டிருந்த மற்றும் சென்றுகொண்டிருந்த சுமாா் ஐந்து முதல் ஆறு இருசக்கர வாகனங்கள் மீது மோதியது.

இருசக்கர வாகனத்தில் பயணித்த ஒரு பெண் உள்பட பலருக்குக் காயங்கள் ஏற்பட்டன.

Advertisement

ஆரம்பகட்ட தகவல்களின்படி, உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை.

இந்த விபத்தைத் தொடா்ந்து, தில்லி காவல்துறை காா் ஓட்டுநா் மீது வழக்குப் பதிவு செய்துள்ளது. விபத்திற்கான சரியான காரணத்தைக் கண்டறிந்து, நடவடிக்கை எடுக்க விசாரணை நடைபெற்று வருகிறது.