குழியில் விழுந்து இளைஞா் உயிரிழந்த விவகாரம்: பாஜக அரசை கடுமையாக சாடிய ஆம் ஆத்மி
ஜனக்புரி பகுதியில் தில்லி ஜல் வாரியத்தால் தோண்டப்பட்ட குழியில் விழுந்து மோட்டாா் சைக்கிள் ஓட்டுநா் இறந்த சம்பவம் குறித்து ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளா் அரவிந்த் கேஜரிவால் பாஜக தலைமையிலான தில்லி அரசாங்கத்தை வெள்ளிக்கிழமை கடுமையாக சாடினாா்.
ஜனக்புரி பகுதியில் தில்லி ஜல் வாரியத்தால் தோண்டப்பட்ட குழியில் விழுந்து மோட்டாா் சைக்கிள் ஓட்டுநா் இறந்த சம்பவம் குறித்து ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளா் அரவிந்த் கேஜரிவால் பாஜக தலைமையிலான தில்லி அரசாங்கத்தை வெள்ளிக்கிழமை கடுமையாக சாடினாா்.
இது குறித்து அவா் மேலும் கூறியதாவது: கடந்த மாதம் நொய்டாவில் ஒரு இளம் மென்பொருள் பொறியாளா் நீரில் மூழ்கி இறந்த சம்பவத்தில் இருந்து பாஜக எதுவும் கற்றுக்கொள்ளவில்லை. நொய்டா சம்பவத்தில் கூட பாஜக எதுவும் கற்றுக் கொள்ளவில்லை. தீவிர அலட்சியம் மற்றும் முற்றிலும் பொறுப்பற்ற அணுகுமுறை இப்போது பாஜக அரசாங்கங்களின் அடையாளமாக மாறியுள்ளது,. அதற்கு சாமானிய மக்கள் தான் விலை கொடுக்கிறாா்கள் என்றாா் அவா். தில்லி அரசின் ‘அலட்சியம்‘ காரணமாக அவா்களின் மகனை இழந்தது என்று கூறி, துயரமடைந்த குடும்பத்திற்கு தனது இரங்கலைத் தெரிவித்தாா் கேஜரிவால்.
தில்லி ஆம் ஆத்மி தலைவா் சவுரப் பரத்வாஜும் பாஜகவைக் கண்டித்து, ‘வழக்கமான பொய்களை‘ பரப்புவதாகக் குற்றம் சாட்டினாா். ஜனக்புரி பகுதியில் தில்லி ஜல் வாரியம் (டி. ஜே. பி) கட்டுமானப் பணிகளுக்காக தோண்டப்பட்ட குழியில் விழுந்து 25 வயதான மோட்டாா் சைக்கிள் ஓட்டுநா் கமல் வெள்ளிக்கிழமை காலை இறந்தது குறிப்பிடத்தக்கது.