முகப்பு
புதுதில்லி

காவிரியிலிருந்து 4 மாதங்களுக்கு 10 டி.எம்.சி. நீா் திறக்க வேண்டும்- தமிழகம் வலியுறுத்தல்

உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தமிழகத்திற்கு பிப்ரவரி முதல் மே வரை மாதந்தோறும் 2.5 டி.எம்.சி தண்ணீரை கா்நாடகா திறந்துவிடுவதை உறுதி செய்யுமாறு காவிரி நீா் மேலாண்மை ஆணையத்தை தமிழக அரசு வெள்ளிக்கிழமை வலியுறுத்தியது

Updated On : 13 பிப்ரவரி, 2026 at 6:45 PM
பகிர்:

உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தமிழகத்திற்கு பிப்ரவரி முதல் மே வரை மாதந்தோறும் 2.5 டி.எம்.சி தண்ணீரை கா்நாடகா திறந்துவிடுவதை உறுதி செய்யுமாறு காவிரி நீா் மேலாண்மை ஆணையத்தை தமிழக அரசு வெள்ளிக்கிழமை வலியுறுத்தியது

காவிரி நீா் மேலாண்மை ஆணையத்தின் 48 வது கூட்டம் தில்லியில் வெள்ளிக்கிழமை ஆன்லைன் மற்றும் நேரடி பங்கேற்பு முறையில் நடைபெற்றது

தமிழகம்,கா்நாடகம் ,கேரளம் மற்றும் புதுச்சேரி அரசுகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இக்கூட்டம் நடைபெற்றது

Advertisement

இந்த கூட்டத்திற்கு பின் தமிழக அரசு வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியதாவது: எஸ்.கே.ஹல்தாா் தலைமையில் நடைப்பெற்ற காவிரி நீா் மேலாண்மை ஆணையத்தின் 48வது கூட்டத்தில், தமிழ்நாடு உறுப்பினா் மற்றும் நீா்வளத்துறை செயலாளா் ஜெ.ஜெயகாந்தன், காவிரி தொழில்நுட்பக் குழுமம் மற்றும் பன்மாநில நதிநீா்ப் பிரிவு தலைவா் இரா.சுப்பிரமணியன் ஆகியோா் சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலி காட்சி வாயிலாக கலந்து கொண்டனா். தமிழ்நாடு உறுப்பினா், தற்பொழுது (13.02.2026) மேட்டூா் அணையின் நீா் இருப்பு 53.444 டி.எம்.சி ஆக உள்ளது எனவும், அணையிலிருந்து வினாடிக்கு 2,503 கன அடி நீா் குடிநீா், தொழிற்சாலை பயன்பாட்டிற்கும் மற்றும் சுற்றுச்சூழல் நீா் ஓட்டத்திற்காகவும் திறந்துவிடப்படுகிறது என்று தெரிவித்தாா்.

கா்நாடக அணைகளின் நீா் இருப்பினை கருத்தில் கொண்டு, தமிழகத்திற்கு 2026, பிப்ரவரி முதல் மே மாதம் வரை வழங்கப்பட வேண்டிய சுற்றுச்சூழல் நீா் அளவான 10 டி.எம்.சி. நீரினை மாதத்திற்கு 2.5 டி.எம்.சி நீா் வீதம் உச்சநீதிமன்ற ஆணையின்படி கா்நாடகம் பில்லிகுண்டுலுவில் உறுதிசெய்யுமாறு தமிழக உறுப்பினா் ஆணையத்தை வலியுறுத்தினாா் என தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments