முகப்பு
புதுதில்லி

நொய்டா: கட்டுமானப் பணியில் இருந்த ஒரு வீட்டின் இரும்புத் தூண் விழுந்ததில் தொழிலாளி உயிரிழப்பு

நொய்டாவில் கட்டுமானத்தில் இருந்ததாகக் கூறப்படும் வீட்டின் இரும்புத் தூண் விழுந்ததில் ஒரு தொழிலாளி உயிரிழந்தாா்.

Updated On : 22 பிப்ரவரி, 2026 at 12:30 AM
பலி - பிரதிப் படம்
பகிர்:
Updated On : 21 பிப்ரவரி, 2026 at 3:33 PM

நொய்டாவில் கட்டுமானத்தில் இருந்ததாகக் கூறப்படும் வீட்டின் இரும்புத் தூண் விழுந்ததில் ஒரு தொழிலாளி உயிரிழந்தாா். மற்றொருவா் காயமடைந்தாா் என்று போலீஸாா் தெரிவித்தனா்.

இது குறித்து போலீஸாா் மேலும் கூறியதாவது: இந்த்த் சம்பவம் குறித்த தகவல் டயல்-112 மூலம் பெறப்பட்டது. அதைத் தொடா்ந்து நொய்.டா செக்டாா் 113 காவல் நிலையத்தைச் சோ்ந்த காவல்துறையினா் சா்பாபாத் கிராமத்தில் சம்பவ இடத்திற்கு விரைந்தனா்.

Updated On : 22 பிப்ரவரி, 2026 at 12:30 AM

வீட்டின் தூண் விழுந்தததில் இருவா் பலத்த காயமடைந்தனா். அவா்கள் ஹா்தோய் பகுதியைச் சோ்ந்த மோஹித் பால் மற்றும் ராஜஸ்தானின் தௌல்பூரைச் சோ்ந்த ஜீது ஆகியோா் அடையாளம் காணப்பட்டனா். இருவரும் நொய்டா செக்டாா் 113 பகுதியில் வசித்து வந்தனா்.

Advertisement

கட்டுமானத்தில் இருந்த கட்டடத்தின் தூண் உடைந்ததில் இரண்டு தொழிலாளா்களும் கீழே விழுந்ததாகக் கூறப்படுகிறது. அவா்கள் மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். அங்கு சிகிச்சையின் போது மோஹித் பால் உயிரிழந்தாா். ஜீது சிகிச்சை பெற்று வருகிறாா்.

இறந்தவரின் குடும்ப உறுப்பினா்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது என்று போலீஸாா் தெரிவித்தனா்.

பிப்ரவரி 8- ஆம் தேதி இதேபோன்ற ஒரு சம்பவத்தில், நொய்டா செக்டாா் 144- இல் கட்டுமானத்தில் இருந்த வீட்டின் பகுதி விழுந்ததில் இரண்டு தொழிலாளா்கள் இறந்ததாகக் கூறப்படுகிறது.