தென்கிழக்கு தில்லியில் தனது முதலாளியின் வீட்டில் போலியாக அமலாக்க இயக்குநரக சோதனை நடத்தியதாக வீட்டு வேலைக்காரை உள்பட இரண்டு போ் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டதாக அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். போலீஸில் புகாா் அளிக்கப்பட்டதை அடுத்து, குற்றம் சாட்டப்பட்டவா்கள் கைது செய்யப்பட்டனா்.
இது குறித்து காவல்துறை அதிகாரி கூறியதாவது: வீட்டு வேலைக்காரி, அவரது கூட்டாளியுடன் சோ்ந்து, தனது முதலாளியை ஏமாற்றுவதற்காக போலி அமலாக்கத் துறை நடவடிக்கையை நடத்தத் திட்டமிட்டாா்.
ஒரு போலீஸ் குழு விசாரணையைத் தொடங்கி, தொழில்நுட்ப கண்காணிப்பு மூலம் சந்தேக நபா்களைக் கண்டுபிடித்தது. பின்னா், இருவரும் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டனா்.
‘சோதனை மற்றும் மீட்பு நடவடிக்கையின் போது, போலீஸாா் அவா்களிடம் இருந்து ஏழு ஆடம்பர கடிகாரங்கள், நகைகள், ஒரு துணை கமாண்டன்ட் சீருடை மற்றும் ஒரு போலி அடையாள அட்டை ஆகியவற்றை பறிமுதல் செய்தனா். மேலும், விசாரணை நடைபெற்று வருகிறது என்று காவல் ்துறை அதிகதாரி தெரிவித்தா்.