மேற்கு வங்க முன்னாள் அமைச்சர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை!
மேற்கு வங்க முன்னாள் கல்வி அமைச்சர் பார்த்தா சட்டர்ஜி வீட்டில் சோதனை பற்றி..
பள்ளி வேலைவாய்ப்பு நியமன மோசடி தொடர்பாக மேற்கு வங்க முன்னாள் கல்வி அமைச்சர் பார்த்தா சட்டர்ஜியின் கொல்கத்தாவில் உள்ள இல்லத்தில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
மத்தியப் படைகள் அவரது இல்லத்தைச் சுற்றி வளைத்துப் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வந்த பிறகு, அமலாக்கத்துறை அதிகாரிகள் குழு நக்தலா பகுதியில் அமைந்துள்ள சட்டர்ஜியின் இல்லத்திற்குச் சென்றடைந்தனர். அங்கு சோதனை மேற்கொண்டனர்.
முன்னதாக, இந்த மோசடி தொடர்பாக ஜூலை 23, 2022 அன்று அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்ட சட்டர்ஜி, மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக (39 மாதங்கள்) சிறைக்காவலில் இருந்தார். நவம்பர் 11 அன்று ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
Advertisement
அமலாக்கத்துறை சட்டர்ஜியின் இல்லத்தில் சோதனை நடத்தியதுடன், அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றது.
கடந்த 2022ல் சட்டர்ஜியின் நக்தலா இல்லத்திலும், அவரது நெருங்கிய கூட்டாளியான அர்பிதா முகர்ஜியின் இடங்களிலும் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தியது. இந்த விசாரணையில் ரூ. 50 கோடிக்கும் அதிகமான ரொக்கப் பணம், தங்க நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து, சட்டர்ஜி மற்றும் முகர்ஜி ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர்.