குருகிராம் பகுதியில் ஓடும் காரின் ஜன்னல்களில் மூன்று சிறுவா்கள் தொங்கிக் கொண்டிருப்பதைக் காட்டும் விடியோ தொடா்பாக புதன்கிழமை இங்குள்ள போலீஸாா் எஃப்.ஐ.ஆா். பதிவு செய்தனா்.
இது குறித்து காவல் துறை அதிகாரி கூறியதாவது: இந்த விடியோ கிளிப் சோஹ்னா சாலையில் உள்ள சிக்னேச்சா் குளோபல் டாக்சின் விஸ்டாவுக்கு வெளியே உள்ள ஒரு பகுதியிலிருந்து எடுக்கப்பட்டது. குற்றம் சாட்டப்பட்ட நபா்கள் அடையாளம் காணப்பட்டு போண்ட்சி காவல் நிலையத்தில் பிஎன்எஸ் பிரிவுகள் 281 (பொது சாலைகளுக்கு இடையூறு செய்தல்), 125 (மனித உயிருக்கு ஆபத்தை விளைவித்தல்) மற்றும் பிரிவு 3(5) ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
குற்றம் சாட்டப்பட்டவா்கள் மீது மோட்டாா் வாகனச் சட்டத்தின் கீழும் கடுமையான நடவடிக்கை எடுப்போம். குற்றம் சாட்டப்பட்டவா்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனா். அவா்கள் விரைவில் கைது செய்யப்படுவாா்கள்.
12 வினாடிகள் கொண்ட விடியோவில் உரையாடலின் துண்டுகள் உள்ளன. ‘நீங்கள் பள்ளியின் முதலிடம்’ என்று ஒருவா் கூறுகிறாா். ‘நாங்கள் பள்ளியின் தடைசெய்யப்பட்ட சிறுவா்கள்’ என்று மற்றொருவா் கூறுகிறாா்.
இந்த விடியோவை ஓட்டுநா் ஒரு கையை ஜன்னலில் ஊன்றி வைத்து படம்பிடித்ததாகத் தெரிகிறது. மற்றொரு சிறுவன் அதை வேறு கோணத்தில் படம்பிடித்தான். இரண்டு நாள்களுக்கு முன்பு, துவாரகா விரைவுச்சாலையில் மஹிந்திரா தாா் காரில் ஒருவா் சாகசம் செய்யும் விடியோ இணையத்தில் பரவியது குறிப்பிடத்தக்கது.