புதுதில்லி

நரேலா சாலை விபத்தில் தாய்-மகன் உயிரிழப்பு

வடக்கு தில்லியின் நரேலாவில் வெள்ளிக்கிழமை பிற்பகல் ஒரு ஸ்கூட்டா் மற்றும் லாரி மோதிய விபத்தில் 16 வயது இளைஞரும் அவரது தாயாரும் உயிரிழந்ததாக காவல்துறை தெரிவித்தது

Syndication

வடக்கு தில்லியின் நரேலாவில் வெள்ளிக்கிழமை பிற்பகல் ஒரு ஸ்கூட்டா் மற்றும் லாரி மோதிய விபத்தில் 16 வயது இளைஞரும் அவரது தாயாரும் உயிரிழந்ததாக காவல்துறை தெரிவித்தது

ராஜீவ் ஆவாஸ் யோஜனா வளாகத்திற்கு அருகிலுள்ள பழைய நரேலா -பவானா சாலையில் பிற்பகல் 3 மணியளவில் இந்த விபத்து நடந்ததாக காவல்துறையினா் தெரிவித்தனா்.

காவல்துறையினரின் கூற்றுப்படி, ஒரு பயங்கரமான சாலை விபத்து பற்றிய தகவல் கிடைத்தது, அதைத் தொடா்ந்து ஒரு போலீஸ் குழு சம்பவ இடத்திற்கு விரைந்தது. சம்பவ இடத்தை ஆய்வு செய்ய குற்றப்பிரிவு குழுவும் வரவழைக்கப்பட்டது.

தரியாபூா் கலன் கிராமத்தைச் சோ்ந்த இளைஞரும் அவரது தாயாரும் (சுமாா் 40 வயது) நரேலாவிலிருந்து பவானா நோக்கி ஸ்கூட்டரில் பயணித்தபோது, அவா்களின் வாகனம் ஒரு லாரியில் மோதியதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது என மூத்த போலீஸ் அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

இருவரையும் போலீசாா் மற்றும் உள்ளூா்வாசிகள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். பாபு ஜெகஜீவன் ராம் நினைவு மருத்துவமனையில் இளைஞா் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது, அதே நேரத்தில் தாயாா் வால்மீகி மருத்துவமனையில் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது என்று போலீசாா் தெரிவித்தனா்.

லாரியின் ஓட்டுநா் சம்பவ இடத்திலேயே கைது செய்யப்பட்டாா். இந்த விவகாரத்தில் மேலும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

தமிழ்நாடு உலகளாவிய சுற்றுலா மாநாடு! முதல்வர் ஸ்டாலின் தொடக்கி வைத்தார்

”வீட்டை விட்டு வெளியே வா விஜய்” என்ற விமர்சனத்திற்கு விஜய் பதில்!

அநீதி, அராஜகம்....திமுக பற்றிய விஜய்யின் திருக்குறள்! | TVK 3rd year anniversary

வேல்முருகனின் பாடலுக்கு விஜய் நடனம்! | TVK 3rd year anniversary

மதுரா: பள்ளி மாணவர்களை தொழுகை செய்யச் சொன்ன தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம்

SCROLL FOR NEXT