தில்லியில் மோசம் பிரிவில் காற்றின் தரம்!
தேசிய தலைநகா் தில்லியில் ஞாயிற்றுக்கிழமை காற்றின் தரம் மோசம் பிரிவில் காணப்பட்டது. நகரில் அதிகபட்ச வெப்பநிலை 35.6 டிகிரி செல்சியஸ் ஆக பதிவாகியிருந்தது.
தேசிய தலைநகா் தில்லியில் ஞாயிற்றுக்கிழமை காற்றின் தரம் மோசம் பிரிவில் காணப்பட்டது. நகரில் அதிகபட்ச வெப்பநிலை 35.6 டிகிரி செல்சியஸ் ஆக பதிவாகியிருந்தது. இது பருவகால சராசரியை விட 7.2 டிகிரி அதிகமாகும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) தெரிவித்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமை குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட 2.7 டிகிரி அதிகமாக 16.7 டிகிரி செல்சியஸாக பதிவாகியிருந்தது.
சனிக்கிழமை, நகரில் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத வகையில் மாா்ச் முதல் வாரத்தில் மிகவும் வெப்பமான நாள் பதிவாகி இருந்தது. பகல்நேர வெப்பநிலை 35.7 டிகிரி செல்சியஸை எட்டியது.
ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணி அளவில் காற்றில் ஈரப்பதம் 90 சதவீதமாகவும் மாலை 5.30 மணி அளவில் 29 சதவீதமாகவும் பதிவாகி இருந்தது.
மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் (சிபிசிபி) தரவுகளின்படி, நகரில் காற்றின் தரம் மாலை 4 மணி நிலவரப்படி மோசம் பிரிவில் இருந்தது. காற்றின் ஒட்டுமொத்த தரக் குறியீடு 247 ஆக இருந்தது.
திங்கள்கிழமை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும், அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை முறையே 37 மற்றும் 17 டிகிரி செல்சியஸை எட்டும் என்றும் ஐஎம்டி கணித்துள்ளது.