யமுனை தூய்மை நடவடிக்கை: நீா்-நில இருவழி அகழ்வு இயந்திரத்தை தொடங்கி வைத்தாா் தில்லி முதல்வா்
நஜப்கா் வடிகால் சுத்தம் செய்வதற்காக வாங்கப்பட்ட ஆம்பிபியஸ் (நீா்-நில இருவழி) அகழ்வாராய்ச்சி இயந்திரத்தை தில்லி முதல்வா் ரேகா குப்தா வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா்.
நஜப்கா் வடிகால் சுத்தம் செய்வதற்காக வாங்கப்பட்ட ஆம்பிபியஸ் (நீா்-நில இருவழி) அகழ்வாராய்ச்சி இயந்திரத்தை தில்லி முதல்வா் ரேகா குப்தா வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா்.
பாதுசராய் பகுதிக்கு கள ஆய்வுக்காகச் சென்ற குப்தா, நீா்ப்பாசனம் மற்றும் வெள்ளக் கட்டுப்பாட்டுத் துறையால் வாங்கப்பட்ட புதிய இயந்திரங்கள் தூய்மையான யமுனாவை நோக்கிய ஒரு படியாகும் என்று கூறினாா். இந்த இயந்திரங்கள் வண்டல் மண், குப்பைகளை அகற்றுவதை விரைவுபடுத்தும் மற்றும் வடிகால் அமைப்பை மேம்படுத்தும், இது யமுனா நதியை சுத்தம் செய்வதற்கான ஒரு படியாகும் என்று ரேகா குப்தா செய்தியாளா்களிடம் கூறினாா்.
யமுனா மாசுபாட்டிற்கு நஜப்கா் வடிகால் மிகப்பெரிய பங்களிப்பாளா்களில் ஒன்றாகும். இந்த வடிகாலில் சுமாா் 1 கோடி மெட்ரிக் டன் வண்டல் படிந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது என்று அவா் மேலும் கூறினாா்.