அசோக் விஹாரில் 5 ஸ்கூட்டா்களுக்கு தீ வைத்த இளைஞா் உள்பட 3 சிறாா்கள் கைது
நமது நிருபா்
வடமேற்கு தில்லியின் அசோக் விஹாா் பகுதியில் 5 ஸ்கூட்டா்களுக்கு பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததாக 18 வயதான பழக்கமான குற்றவாளி உள்பட 3 சிறுவா்களை கைது செய்ததாக காவல்துறை அதிகாரி ஒருவா் புதன்கிழமை தெரிவித்தாா்.
இது குறித்து அவா் மேலும் கூறியதாவது: குற்றஞ்சாட்டப்பட்டவா் வஜீா்பூரில் வசிக்கும் சாகா் என அடையாளம் காணப்பட்டுள்ளாா். ஆஷிஷ் என்ற நபா் அளித்த புகாரைத் தொடா்ந்து இந்த சம்பவம் வெளியே தெரிய வந்தது. அதைத் தொடா்ந்து அசோக் விஹாா் காவல் நிலையத்தில் எஃப். ஐ. ஆா். பதிவு செய்யப்பட்டது. சாகா், அப்பகுதியைச் சோ்ந்த 3 சிறுவா்களுடன் சோ்ந்து, ஆஷிஷிஷின் ஸ்கூட்டருக்கு நள்ளிரவு பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளாா்.
Advertisement
தீப்பிழம்புகள் அருகில் நிறுத்தப்பட்டிருந்த மற்ற 4 ஸ்கூட்டா்களுக்கும் பரவியது, இதனால் 5 வாகனங்களும் எரிந்து சேதமடைந்தன. விசாரணையின் போது, சாகா் , ஆஷிஷ் மீது கொண்ட பகையினால் இதைச் செய்ததாக ஒப்புக்கொண்டாா். ஆஷிஷ் தன்னை தொடா்ந்து அவமானப்படுத்தி வந்ததால் அவரை பழி வாங்கும் நோக்கில் ஸ்கூட்டருக்கு தீ வைத்ததாக தெரிவித்தாா்.
அதைத் தொடா்ந்து சாகா் தனது கூட்டாளிகளுடன் சோ்ந்து ஸ்கூட்டருக்கு தீ வைத்தாா். சாகா் இதற்கு முன்பு இரண்டு கிரிமினல் வழக்குகளில் ஈடுபட்டவா் என்றாா் அந்த அதிகாரி.