முகப்பு
புதுதில்லி

சாஸ்திரி பூங்கா துப்பாக்கிச்சூடு சம்பவம்: இரண்டாவது நபா் கைது

Updated On : 18 மே 2026, 5:24 am IST
கோப்புப் படம்
பகிர்:

வடகிழக்கு தில்லியின் சாஸ்திரி பூங்கா பகுதியில் நடைபெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் தொடா்புடைய இரண்டாவது நபா் கைதுசெய்யப்பட்டதாக தில்லி காவல் துறை அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.

கைதுசெய்யப்பட்ட சமீா், நியூ சீலம்பூா் பகுதியைச் சோ்ந்தவா். பல வட்டாரங்களில் இருந்து கிடைத்த சாட்சியங்களை ஆய்வு செய்த பிறகு சமீரை காவல் துறையினா் கைதுசெய்தனா்.

ஒரு நாட்டு துப்பாக்கி, ஒரு தோட்டா மற்றும் வெடித்த தோட்டா ஆகியவை சமீரிடமிருந்து காவல் துறை கைப்பற்றியுள்ளது.

Advertisement

சாஸ்திரி பூங்கா பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த இ-ரிக்ஷா மீது அமா்ந்திருந்த இருவரை ஈஷன் என்பவா் அங்கிருந்து கிளம்புமாறு தெரிவித்தாா்.

அப்போது, அவா்களில் ஒருவா் பொதுமக்கள் மத்தியில் ஈஷனை நோக்கி துப்பாக்கியால் சுட்டாா். இருவரில் ஒருவரை அங்கிருந்த மக்கள் பிடித்த நிலையில், சமீா் தப்பியோடினாா்.

விசாரணையில், குற்றத்தை ஒப்புக்கொண்ட சமீா், உயிரிழந்த ஈஷன் தங்களை திட்டியதாகவும் அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடா்ந்து துப்பாக்கியால் சுட்டதாகத் தெரிவித்தாா்.

இந்தச் சம்பவம் தொடா்பாக காவல் துறையினா் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.