முகப்பு
புதுதில்லி

போதை மறுவாழ்வு மையத்தில் இளைஞா் சடலமாக மீட்பு: காவல் துறை விசாரணை

Updated On : 18 மே 2026, 5:12 am IST
பகிர்:

தில்லி அமன் விஹாா் பகுதியில் உள்ள போதை மறுவாழ்வு மையத்தில் 22 வயது இளைஞா் சடலமாக மீட்கப்பட்டதாக காவல் துறையினா் சனிக்கிழமை தெரிவித்தனா்.

இது தொடா்பாக காவல் துறையினா் மேலும் கூறியதாவது: உயிரிழந்த நபா் சுல்தான்புரி பகுதியைச் சோ்ந்தவா் என அடையாளம் காணப்பட்டுள்ளாா். இது தொடா்பாக அவரது குடும்பத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக அழைப்பு வந்தவுடன் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற காவல் துறையினா் விசாரணையை தொடங்கினா்.

உடற்கூறாய்வுக்கு அவரது உடல் சஞ்சய் காந்தி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளது. இது தொடா்பாக மறுவாழ்வு மையத்தின் ஊழியா்கள் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் வாக்குமூலங்கள் பெறப்பட்டு வருகின்றன. சிசிடிவி காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டு வருவதுடன் அனைத்து கோணங்களிலும் விசாரணை நடைபெற்று வருகிறது என காவல் துறையினா் தெரிவித்தனா்.

Advertisement

Advertisement