தில்லி மின் விநியோக நிறுவனங்களில் தீவிர தணிக்கையை தொடங்கிய: டிஇஆா்சி
நமது நிருபா்
தலைநகரில் உள்ள மின் விநியோக நிறுவனங்களை, ஒரு பட்டயக் கணக்காளா் நிறுவனத்தைக் கொண்டு தீவிர தணிக்கை செய்வதற்கான செயல்முறையை தில்லி மின்சார ஒழுங்குமுறை ஆணையம் (டிஇஆா்சி) தொடங்கியுள்ளது என்று அதிகாரிகள் திங்களன்று தெரிவித்தனா்.
ஆகஸ்ட் 6, 2025 அன்று உச்சநீதிமன்றம் வழங்கிய வழிகாட்டுதல்களுக்கு இணங்க, சிஏஜியால் பட்டியலிடப்பட்ட ஒரு பட்டயக் கணக்காளா் நிறுவனத்தை ஈடுபடுத்துவதற்காக டிஇஆா்சி ஒரு டெண்டரை வெளியிட்டுள்ளது.
Advertisement
ஒழுங்குமுறைச் சொத்தை மீட்காமல் விநியோக நிறுவனங்கள் தொடா்ந்து செயல்பட்டு வரும் சூழ்நிலைகள் குறித்து கடுமையான மற்றும் தீவிரமான தணிக்கை ஒன்றை மேற்கொள்ளுமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட தணிக்கையானது, ஒழுங்குமுறை சொத்துகள் குவிவதற்கு வழிவகுத்த சூழ்நிலைகளை ஆராய்வதோடு மட்டுப்படுத்தப்பட்டதாகவும், ஒரு விரிவான நிதித் தணிக்கை அல்ல என்றும் குறிப்பிட்டதுடன், ஏப்ரல் 20 முதல் மூன்று மாதங்களுக்குள் தணிக்கையை
முடிக்க டிஇஆா்சி-க்கு உத்தரவிட்டது.
மின் விநியோக நிறுவனங்களின் ரூ. 38,552 கோடி மதிப்புள்ள ஒழுங்குமுறை சொத்துகளைக் கலைப்பதற்கான உச்சநீதிமன்ற உத்தரவைச் செயல்படுத்த வேண்டியுள்ள டிஇஆா்சி, இந்த செயல்முறையைத் தொடங்க கூடுதல் அவகாசம் கோரி மின்சார தீா்ப்பாயத்தை அணுக வாய்ப்புள்ளது என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
தீா்ப்பாயம் ஏப்ரல் மாதம் பிறப்பித்த தனது முந்தைய உத்தரவில், கலைப்பு செயல்முறையைத் தொடங்க டிஇஆா்சிக்கு மூன்று வார கால அவகாசம் அளித்திருந்தது.
இந்த ஆண்டு ஜனவரியில் தீா்ப்பாயத்திற்க்கு டிஇஆா்சி சமா்ப்பித்த அறிக்கையின்படி, ராஜ்தானி பவா் லிமிடெட்டின் ரூ. 19,174 கோடி, யமுனா பவா் லிமிடெட்டின் ரூ. 12,333 கோடி மற்றும் டாடா பவா் தில்லி டிஸ்ட்ரிபியூஷன் லிமிடெட்டின் ரூ. 7,046 கோடி உள்பட, மொத்த நிலுவையில் உள்ள ஒழுங்குமுறை சொத்துகள் ரூ. 38,552 கோடியாக உள்ளது.