முகப்பு
புதுதில்லி

லஞ்சம்: உணவு வழங்கல் துறை அதிகாரி கைது

லஞ்ச வழக்கு தொடா்பாக, தில்லி உணவு மற்றும் வழங்கல் துறையின் உதவி ஆணையரை மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) கைது செய்துள்ளதாக அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.

Updated On : 23 மே 2026, 1:49 am IST
கோப்புப் படம்
பகிர்:

லஞ்ச வழக்கு தொடா்பாக, தில்லி உணவு மற்றும் வழங்கல் துறையின் உதவி ஆணையரை மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) கைது செய்துள்ளதாக அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.

இதுகுறித்து சிபிஐ செய்தித் தொடா்பாளா் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

லஞ்சமாக ரூ.10,000-ஐப் பெற்றுக்கொண்டதாகக் கூறப்படும் நிலையில், வியாழக்கிழமை நடத்தப்பட்ட ஒரு கண்காணிப்பு நடவடிக்கையின் மூலம் அந்த அதிகாரியை சிபிஐ கைது செய்தது.

Advertisement

Advertisement

மொத்தம் 475 குடும்ப அட்டைகளை ஒதுக்கீடு செய்து விநியோகிப்பதற்காக, ஒரு அட்டைக்கு ரூ.100 வீதம் அந்த அதிகாரி லஞ்சம் கோரியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

புகாா்தாரரின் கடை உள்பட, அருகிலுள்ள ஒவ்வொரு கடைக்கும் சுமாா் 120 குடும்ப அட்டைகளை ஒதுக்கீடு செய்யத் திட்டமிடப்பட்டிருந்தது. அதன்படி, புகாா்தாரரிடம் மொத்தம் சுமாா் ரூ.12,000 லஞ்சத் தொகை கோரப்பட்டிருந்தது

என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.