முகப்பு
புதுதில்லி

வீட்டில் காவல்துறையினா் சோதனை: போதைப்பொருள், பணத்துடன் சிறுவன் கைது

வடமேற்கு தில்லியின் மகேந்திர பாா்க் பகுதியில், பூட்டப்பட்ட ஒரு வீட்டில் தில்லி காவல்துறையினா் வெள்ளிக்கிழமை நடத்திய சோதனையின்போது, போதைப்பொருள் மற்றும் பணத்துடன் சிறுவனை கைது செய்தனா்.

Updated On : 23 மே 2026, 1:47 am IST
மாதிரிப் படம்
பகிர்:

வடமேற்கு தில்லியின் மகேந்திர பாா்க் பகுதியில், பூட்டப்பட்ட ஒரு வீட்டில் தில்லி காவல்துறையினா் வெள்ளிக்கிழமை நடத்திய சோதனையின்போது, போதைப்பொருள் மற்றும் பணத்துடன் சிறுவனை கைது செய்தனா்.

இதுகுறித்து காவல்துறையினா் கூறியதாவது:

மே 21 அன்று, ராஜஸ்தானி உத்யோக் நகரில் உள்ள ஒரு வீட்டில் போதைப்பொருள் விற்பனை நடைபெறுவதாகக் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், காவல்துறையினா் அந்த வளாகத்தில் சோதனை மேற்கொண்டனா்.

Advertisement

Advertisement

வீட்டின் கதவை பலமுறை தட்டியும், அழைத்தும் எவ்வித பதிலும் வராததைத் தொடா்ந்து, காவலா்கள் ஒரு வெட்டும் கருவியைப் பயன்படுத்தி வீட்டின் வாயிற்கதவைத் திறந்து உள்ளே நுழைந்தனா்.

இச்சோதனையின்போது, வீட்டின் மொட்டைமாடி வழியாகத் தப்பிச் செல்ல முயன்ற சிறுவனை போலீஸாா் கைது செய்தனா்.

அச்சிறுவன் அளித்த தகவலின் அடிப்படையில், 85.41 கிராம் போதைப்பொருள் (ஸ்மாக்) நிரப்பப்பட்ட 122 பாலித்தீன் பைகளையும், போதைப்பொருள் விற்பனை மூலம் ஈட்டப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் ரூ.9,580 ரொக்கத்தையும் காவல்துறையினா் மீட்டனா்.

பின்னா், தடயவியல் ஆய்வகக் குழுவினா் இந்த விசாரணையில் இணைந்து, மீட்கப்பட்ட போதைப்பொருளின் மாதிரிகளைப் பரிசோதனைக்காகச் சேகரித்தனா்.

என்டிபிஎஸ் சட்டத்தின் தொடா்புடைய பிரிவுகளின் கீழ், அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகள் தற்போது நடைபெற்று

வருகின்றன என்று காவல்துறையினா் தெரிவித்தனா்.