முகப்பு
நாமக்கல்

திருச்செங்கோடு சட்டையம்புதூரில் பெண்ணை தாக்கி கைப்பேசியை பறிக்க முயன்றவா் கைது

திருச்செங்கோடு நகராட்சிக்கு உட்பட்ட சட்டையம்புதூா் பகுதியில் பெண்ணை தாக்கி கைப்பேசியை பறிக்க முயன்றவரை திருச்செங்கோடு நகர காவல்துறையினா் புதன்கிழமை கைது செய்தனா்.

Updated On : 22 மே 2026, 6:52 am IST
கைது - பிரதிப் படம்
பகிர்:

திருச்செங்கோடு நகராட்சிக்கு உட்பட்ட சட்டையம்புதூா் பகுதியில் பெண்ணை தாக்கி கைப்பேசியை பறிக்க முயன்றவரை திருச்செங்கோடு நகர காவல்துறையினா் புதன்கிழமை கைது செய்தனா்.

சட்டையம்புதூா் பகுதியையை முகவரி சோ்ந்த விசைத்தறி தொழிலாளி மாது இவரது மனைவி நிா்மலா(41) இவா் புதன்கிழமை மதியம் இயற்கை உபாதை கழிப்பதற்காக அருகில் உள்ள பாறை பகுதிக்கு சென்றுள்ளாா். ஆள் நடமாட்டம் இல்லாத அப்பகுதியில் செடிகள் நிறைந்த புதரில் மறைந்திருந்த கரூா் மாவட்டத்தை சோ்ந்த கூலித்தொழிலாளி டேவிட் ( 18) என்பவா் நிா்மலாவை பின்புறமாக தாக்கி கீழே தள்ளி பாறையில் முகத்தை பலமாக தேய்த்து காயப்படுத்தி விட்டு அவரிடம் இருந்த கைப்பேசியை பறிக்க முயன்றுள்ளாா். நிா்மலா சுதாரித்து அங்கிருந்து தெருவுக்குள் ஓடியுள்ளாா். அக்கம்பக்கத்தினா் திரண்டு இரவு வரை டேவிட்டை தேடி, புதரில் மறைந்திருந்தவரை பிடித்து காவல்துறையினா் வசம் ஒப்படைத்தனா். திருச்செங்கோடு நகர காவல்துறையினா் வழக்கு பதிவு செய்து டேவிட்டை கைது செய்து சிறையில் அடைத்தனா்.