பேய்க்கரும்பு
பேய்க்கரும்பு - அபிராஜ ராஜேந்திர மிச்ரா - தமிழில்: அலமேலு கிருஷ்ணன்; பக்.96; ரூ.115; சாகித்ய அகாதெமி, சென்னை - 18; )044-2431 1741.
நூல் அரங்கம்பேய்க்கரும்பு
பேய்க்கரும்பு - அபிராஜ ராஜேந்திர மிச்ரா - தமிழில்: அலமேலு கிருஷ்ணன்; பக்.96; ரூ.115; சாகித்ய அகாதெமி, சென்னை - 18; )044-2431 1741.
பேய்க்கரும்பு - அபிராஜ ராஜேந்திர மிச்ரா - தமிழில்: அலமேலு கிருஷ்ணன்; பக்.96; ரூ.115; சாகித்ய அகாதெமி, சென்னை - 18; )044-2431 1741.
அபிராஜ ராஜேந்திர மிச்ரா - சமஸ்கிருத மொழி வல்லுநர். இவரின் "இஷுசுந்தா' - சம்ஸ்கிருத மொழியில் எழுதப்பட்ட எட்டுச் சிறுகதைகள் கொண்ட தொகுப்பு. 1988-ஆம் ஆண்டில் சாகித்ய அகாதெமி விருது பெற்றிருக்கிறது. அந்த நூலே "பேய்க்கரும்பு' என்ற பெயரில் தமிழாக்கம் பெற்றிருக்கிறது.
இவரது கதைகளில் பெரும்பாலும் பெண்களின் பலவீனம் கருப்பொருளாகி இருக்கிறது. கதைகளின் ஊடே பழமொழிகள், உவமைகள், நீதிக்கதைகள் விரவிக் கிடக்கின்றன.
"பேய்க்கரும்பு' சிறுகதை நிறைவேறாத காதலைச் சொல்கிறது. விந்திய மலைப் பகுதியின் கிராமியத்தையும், அதன் மக்களையும் படம் பிடிக்கிறது. தனக்குக் கீழ் வேலை செய்யும் வேலைக்காரனது மனைவியின் அழகு குறித்து கதாநாயகனின் மனைவி விவரிக்கும்போது அக்கறை காட்டாத கதாநாயகன், அவள் தன் பால்யகால சிநேகிதி என்று அறியும்போது அதிர்ச்சி அடைகிறான். முடிவில் சிநேகிதியின் மகளையே தனக்கு மருமகளாக்க ஒப்புதல் அளிக்கிறான். ஏழை - பணக்காரன் என்கிற இடைவெளி அதிகம் பேசப்படுகிற கதை.
"வாழ வேண்டும் என்ற ஆசை'யில் வரும் நாயகி தபதி குடும்பத்தைக் காப்பாற்ற தனது இளமையைப் பலியாக்குவது, "ஒரு வயதுப் பெண் குழந்தை' கதையின் நாயகி விமலா, காதலில் தோல்வியுற்று - வேறு ஒருவனுக்கு மணமாகிப் பெற்ற குழந்தையை வெறுப்பது என வாழ்வின் யதார்த்தங்கள் பதிவாகியுள்ளன.
"" இதிலுள்ள பெரும்பாலான கதைகள் இன்று வரையிலான மனித உளவியலையும், நவீன பண்பாட்டு அமைப்பு முறையையும் வெளிப்படுத்துகின்றன - என்று ஆசிரியர் அபிராஜ ராஜேந்திர மிச்ரா தனது முன்னுரையில் கூறியிருப்பது உண்மையே.
இவரது கதைகளின் கரு, சமூகப் பிரச்னைகளை, குறிப்பாகப் பெண்கள், கைம்பெண்கள், கைவிடப்பட்ட பெண் குழந்தைகள் சார்ந்தே இருக்கின்றது. சிறந்த சிறுகதைகள் கொண்ட தொகுதி.