முகப்பு
நூல் அரங்கம்

அயோத்தி, 500 வருட போராட்ட வரலாறு

Updated On : 9 செப்டம்பர், 2025 at 5:15 AM
பகிர்:

அயோத்தி, 500 வருட போராட்ட வரலாறு - சக்திவேல் ராஜ்குமார்; பக்.158; ரூ.150; அல்லயன்ஸ் கம்பெனி, மயிலாப்பூர், சென்னை - 600 004. ✆ 044-24641314.

உலகிலேயே நீண்ட நாள் நடந்த அயோத்தி வழக்கு குறித்தும், ராம ஜென்ம பூமிவழக்கின் 300 வருட பின்னணி குறித்தும் இந்நூல் விரிவாக அலசுகிறது.

ராமர் ஆலயத்தை மையப்படுத்திய அபூர்வ சம்பவங்கள், போராட்டங்கள், அரசியல் நிகழ்வுகள், அயோத்தி வழக்கின் தீர்ப்பு, சட்ட விளக்கங்கள் உள்ளிட்டவற்றை மிகவும் எளிமைப்படுத்தி அனைவரும் புரிந்துகொள்ளும் விதத்தில் கால வரிசையில் தொகுக்கப்பட்டுள்ளது இந்நூலின் சிறப்பு.

ராம ஜென்ம பூமியில் பிரம்மாண்டமான கோயிலை கட்டியவர் விக்கிரமாதித்த மகாராஜா. அவரது காலத்துக்குப் பிறகு பல்வேறு அரசர்களால் செம்மைப்படுத்தப்பட்டது. அதன்பிறகு, மொகலாயர் ஆட்சியில் அந்தக் கோயில் எவ்வாறு படிப்படியாக மசூதியாக மாற்றப்பட்டது என்பதை பல்வேறு ஆதாரங்களை முன்வைத்து இந்நூல் தெளிவுபடுத்துகிறது.

1528-ஆம் ஆண்டிலிருந்து தற்போது அயோத்தில் கட்டப்பட்டுவரும் ராமர் கோயில் வரையிலான நிகழ்வுகள், ராம ஜென்ம பூமியை மீட்க உறுதுணையாக நின்ற இந்து சமய பெரியோர்கள், எதிர்தரப்பினர் ஆகியோர் குறித்து இந்நூல் தெரிவிக்கும் கருத்துகள் நடுநிலையாக உள்ளன.

மொகலாயர்கள், ஆங்கிலேயர்கள், போலி மதச்சார்பின்மை, ஆட்சியாளர்களின் அலட்சியம் ஆகியவற்றால் இந்து மதமும், கோயில்களும் எவ்வாறெல்லாம் சிதைக்கப்பட்டன என்பதை புரிந்துகொள்ள முடிகிறது.

இராமாயணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள 14 நதிகள் தற்போதும் அதே பெயரில், அதே இடத்தில் உள்ளன என்பதை வைத்து ராமாயணம் நிஜமாகவே நிகழ்ந்த சரித்திரம் என்ற கோணம் வியப்பளிக்கிறது. 

முழு கட்டுரையைப் படிக்க →