முகப்பு
நூல் அரங்கம்

கைப்பக்குவம்

Updated On : 9 செப்டம்பர், 2025 at 5:14 AM
பகிர்:

கைப்பக்குவம்- முள்ளஞ்சேரி மு.வேலையன்;  பக்.  470; ரூ. 500; காவ்யா பதிப்பகம்,  சென்னை- 24; ✆ 98404 80232.

குமரி அறிவியல் பேரவையின் 2 ஆண்டுகாலச் செயல்பாடுகள் அத்தனையையும் முழுமையாக ஆவணப்படுத்தியிருக்கிறார் நூலாசிரியரும் அந்தப் பேரவையின் அமைப்பாளருமான முள்ளஞ்சேரி மு.வேலையன்.

பேரவையின் கூட்ட நடவடிக்கைகள், ஆய்வு நடவடிக்கைகள், கருத்தரங்குகள் என அத்தனையும், அதில் கலந்து கொண்டோரின் பெயர்கள், அவர்கள் பேசியது, கூட்ட முடிவுகள், கள ஆய்வின்போது கிடைத்த தகவல்கள், திட்ட அறிக்கைகள் முழுமையாக இந்த நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

அத்தனையும் சுற்றுச்சூழல் தொடர்பான அறிவியல் பார்வைகள், தீர்வுகள் குறித்த முக்கியமான பதிவுகள். இதுமட்டுமல்லாமல், குமரி மாவட்டத்தின் கடல், மலைகள், ஆறுகள், அணைகள், குளங்களைப் பற்றியும் அவற்றைப் பாதுகாக்க வேண்டியதன் தேவைகள், அதற்கான பணிகள் குறித்துக் நூலில் விரிவாகக் கூறப்பட்டுள்ளன.

நூலின் முதல் பகுதிக்கு 'ஆயத்தம்' என்றும், இரண்டாம் பகுதிக்கு 'பக்குவம்' என்றும், மூன்றாம் பகுதிக்கு 'பரிமாற்றம்' என்றும் பெயரிடப்பட்டுள்ளது. முதல் பகுதியில் 13 கட்டுரைகளும், இரண்டாம் பகுதியில் 18 கட்டுரைகளும், மூன்றாம் பகுதியில் 28 கட்டுரைகளும் உள்ளன. அறிவியல் கட்டுரைகளை வாசிக்க இலகுவாக்கும் வகையில், ஒவ்வொரு கட்டுரையின் தொடக்கமும் இலக்கியக் குறிப்புகளுடன் காணப்படுகிறது.

சுற்றுச்சூழல், அறிவியல் ஆர்வலர்கள் பயிற்சிக் கையேடாக இதனைக் கட்டாயம் வாசிக்க வேண்டிய நூல்.

முழு கட்டுரையைப் படிக்க →