முகப்பு
நூல் அரங்கம்

நம் காலத்து நாயகன்

Updated On : 9 செப்டம்பர், 2025 at 5:14 AM
பகிர்:

நம் காலத்து நாயகன் - மி.யூ. லேர்மன்தவ் (தமிழில் பூ. சோமசுந்தரம்); பக்.233; ரூ.190;  அடையாளம், திருச்சி-10; ✆ 04332 273444.

காக்கேஷிய கவிஞர் என அழைக்கப்படும் ரஷ்ய படைப்பாளி மிகைல் யூரியெவிச் லேர்மன்தவ் உளவியல் நாவலான இது ஓர் இளம் ராணுவ அதிகாரியின் கதையை சொல்கிறது. அரசியல் சர்ச்சையில் சிக்கிய லேர்மன்தவ் காக்கேஷிய படைப்பிரிவுக்கு மாற்றப்பட்டபோது ஏற்பட்ட உந்துதலால் இந்நூலை எழுதினார். 

1830-ஆம் ஆண்டுகளில் காக்கேஷிய மலைத்தொடரில் பயணிக்கும் ஓர் இளைஞருக்கு மக்ஸீம் மக்ஸூமிச் எனும் ராணுவ அதிகாரி அறிமுகமாகிறார். ராணுவ பணிக்காலத்தில் ஏற்பட்ட நிகழ்வுகளை இளைஞருடன் பகிர்ந்து கொள்கிறார். அப்போது பிச்சோரின் எனும் ராணுவத் தோழரின் முரண்நகையான வாழ்க்கைக் கதையை அவர் விவரிக்கிறார். 

எந்நேரமும் சிந்தனையுடன் இருக்கும் பிச்சோரின் கணிப்புத் தவறாத உளவியல் பார்வையுடன் ஆண்களையும் பெண்களையும் தன் விருப்பத்துக்கு ஏற்றபடி இசையவைக்கும் கதாபாத்திரமாக உள்ளான். அவனது செயல்கள் பலரது வாழ்க்கையை சிதைக்கின்றன. இரு பகுதிகளாக உள்ள இந்த நாவலின் முதல் இரு அத்தியாயங்கள் கதை சொல்லி போக்கிலும், 
மீதமுள்ள அத்தியாயங்கள் பிச்சோரின் நாள் குறிப்பாகவும் உள்ளன. ஆங்கிலக் கவி பைரன், ரஷியாவின் அலெக்ஸாந்தர் புஷ்கின்ஆகியோரின்எழுத்துக்களின் தாக்கத்தை இதில் காணலாம். ரஷிய இலக்கியமான இது தமிழில் எளிய நடையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

நவீன மெய்யான தவிர்க்கவியலாத படைப்பாக உள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →