அலைபேசியுடன் நாம்
வளரிளம் பருவத்தில் உள்ளவர்களும், அவர்களது பெற்றோரும் அவசியம் வாசிக்க வேண்டிய நூல்.
அலைபேசியுடன் நாம் - வள்ளியம்மை அருணாசலம்; பக்.76; ரூ.95; சில்வர் 'ஃ'பிஷ் பதிப்பகம், சென்னை - 44; 73059 10955.
அலைபேசி நம் வாழ்வை எப்படியெல்லாம் அலைக்கழித்துக் கொண்டிருக்கிறது என்பதையும், அதன் சாதக, பாதகங்களையும் தெரிவிக்கும் குறுங்கட்டுரைகளின் தொகுப்பு இது.
அலைபேசி கண்டறிவதற்கு முன்பு இருந்த சூழல் எப்படியிருந்தது என்பதில் தொடங்கி, தற்போது ஸ்மார்ட் போன், ஸ்மார்ட் வாட்ச் என டிஜிட்டல் பரிணாம வளர்ச்சி வரையிலும் பல்வேறு விஷயங்களை அலசியிருக்கிறார் நூலாசிரியர்.
பொதுவாக, அனைத்துக் கண்டுபிடிப்புகளும் ஆரம்பத்தில் விமர்சனங்களுக்குட்பட்டே சமூகத்துக்கு அறிமுகமாயிருக்கின்றன எனக் கூறும் அவர், அந்த வகையில் அலைபேசிகள் நம்முள் ஊடுருவி எவ்வாறு ஆட்கொண்டிருக்கிறது என்பதை சுவாரசியமாக தெரிவித்துள்ளார். ஒவ்வொரு குறுங்கட்டுரையின் முடிவிலும் அலைபேசி குறித்த அறிவியல் தகவல்களையும், தரவுகளையும் தந்திருப்பது கூடுதல் சிறப்பு.
மது, புகையைப் போலவே மனிதர்களை அடிமையாக்கிக் கொள்ளும் அலைபேசியின் பிடியிலிருந்து விடுதலை பெறுவதற்கான வழிமுறைகளும் நூலின் பல கட்டுரைகளில் வழங்கப்பட்டுள்ளன. அதேபோன்று, சமூக செயற்பாட்டாளர்களிடம் இருந்தும் அதற்கான உத்திகளைப் பெற்று வாசகர்களுக்கு அளித்துள்ளார் நூலாசிரியர்.
ஒருபக்கம் அலைபேசியின் வலைக்குள் சிக்கித் தவித்து வந்தாலும், மற்றொரு பக்கம் அதன் அத்தியாவசியத்தை புறந்தள்ள முடியாது என்ற உண்மையை கட்டுரையில் உணர்த்தியுள்ளார். வளரிளம் பருவத்தில் உள்ளவர்களும், அவர்களது பெற்றோரும் அவசியம் வாசிக்க வேண்டிய நூல்.
அலைபேசியுடன் நாம் - வள்ளியம்மை அருணாசலம்; பக்.76; ரூ.95; சில்வர் 'ஃ'பிஷ் பதிப்பகம், சென்னை - 44; 73059 10955.
அலைபேசி நம் வாழ்வை எப்படியெல்லாம் அலைக்கழித்துக் கொண்டிருக்கிறது என்பதையும், அதன் சாதக, பாதகங்களையும் தெரிவிக்கும் குறுங்கட்டுரைகளின் தொகுப்பு இது.
அலைபேசி கண்டறிவதற்கு முன்பு இருந்த சூழல் எப்படியிருந்தது என்பதில் தொடங்கி, தற்போது ஸ்மார்ட் போன், ஸ்மார்ட் வாட்ச் என டிஜிட்டல் பரிணாம வளர்ச்சி வரையிலும் பல்வேறு விஷயங்களை அலசியிருக்கிறார் நூலாசிரியர்.
பொதுவாக, அனைத்துக் கண்டுபிடிப்புகளும் ஆரம்பத்தில் விமர்சனங்களுக்குட்பட்டே சமூகத்துக்கு அறிமுகமாயிருக்கின்றன எனக் கூறும் அவர், அந்த வகையில் அலைபேசிகள் நம்முள் ஊடுருவி எவ்வாறு ஆட்கொண்டிருக்கிறது என்பதை சுவாரசியமாக தெரிவித்துள்ளார். ஒவ்வொரு குறுங்கட்டுரையின் முடிவிலும் அலைபேசி குறித்த அறிவியல் தகவல்களையும், தரவுகளையும் தந்திருப்பது கூடுதல் சிறப்பு.
மது, புகையைப் போலவே மனிதர்களை அடிமையாக்கிக் கொள்ளும் அலைபேசியின் பிடியிலிருந்து விடுதலை பெறுவதற்கான வழிமுறைகளும் நூலின் பல கட்டுரைகளில் வழங்கப்பட்டுள்ளன. அதேபோன்று, சமூக செயற்பாட்டாளர்களிடம் இருந்தும் அதற்கான உத்திகளைப் பெற்று வாசகர்களுக்கு அளித்துள்ளார் நூலாசிரியர்.
ஒருபக்கம் அலைபேசியின் வலைக்குள் சிக்கித் தவித்து வந்தாலும், மற்றொரு பக்கம் அதன் அத்தியாவசியத்தை புறந்தள்ள முடியாது என்ற உண்மையை கட்டுரையில் உணர்த்தியுள்ளார். வளரிளம் பருவத்தில் உள்ளவர்களும், அவர்களது பெற்றோரும் அவசியம் வாசிக்க வேண்டிய நூல்.