முகப்பு
நூல் அரங்கம்

பயணம் முடிவதில்லை

'அவள் ஒரு தொடர்கதை' திரைப்படத்தின் மூலக்கதை ஆசிரியரின் தொகுப்பு இது.

Updated On : 9 செப்டம்பர், 2025 at 5:15 AM
பகிர்:

பயணம் முடிவதில்லை-எம்.எஸ்.பெருமாள்: பக்.300;ரூ.300; வானதி பதிப்பகம், சென்னை-17: ✆044-24342810.

'அவள் ஒரு தொடர்கதை' திரைப்படத்தின் மூலக்கதை ஆசிரியரின் தொகுப்பு இது. 1961-ஆம் ஆண்டு முதல் வார, மாத, இதழ்களிலும், ஒலி-ஒளி ஊடகங்களிலும் சிறுகதை, குறுநாவல், நாடகம், கட்டுரை என தொடர்ந்து எழுதி வருபவர் எம்.எஸ்.பெருமாள். மொத்தம் 18 சிறுகதைகளைக் கொண்ட இத்தொகுப்பில் கதைகள் ஒவ்வொன்றும் வெவ்வேறு மாதிரியான களங்களைக் கொண்டிருக்கின்றன. கதை மாந்தர்களின் வட்டார வழக்கு எளிதாகப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

தனிக்குடித்தனத்திலும், கூட்டுக்குடும்பத்திலும் ஏற்படும் உறவு முறை சிக்கல்களும், பிற பிரச்னைகளும், சவால்களுமே கதைகளின் களங்களாக உள்ளன. குடும்பத் தலைவிகள் தங்களுடைய தியாகங்களாலும், பொறுமையாலும் பிரச்னைகளை எப்படிக் கையாள்கிறார்கள் என்பது பெரும்பாலான கதைகளில் சித்திரிக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு கதையும் தொடங்கும்போது உள்ள வேகமும், நடையும் இறுதி வரை தொய்வின்றி தொடர்வது சிறப்பு. வாசகர்கள் யூகிக்கும் எந்த முடிவையும் கதைக்குத் தந்து விடாமல் வேறொரு முடிவைத் தருவது ஆசிரியரின் வளமையான கற்பனை வளத்தைப் புலப்படுத்துகிறது.

இத்தொகுப்பின் முக்கிய அம்சமாக, கதைகள் வெளியான காலகட்டங்களில் இருந்த தமிழறிஞர்கள், எழுத்துலக ஆளுமைகள், பத்திரிகை உலக ஜாம்பவான்கள் மற்றும் இலக்கியத்தின் முக்கிய ஆர்வலர்களிடமிருந்து கடிதங்கள் வாயிலாக இவருக்கு வந்த பாராட்டுகளையும், விமர்சனங்களையும் கதைகளுக்கு இடையே பதிவேற்றியிருப்பது ஒரு மாறுபட்ட அணுகுமுறையாக உள்ளது.

நவீன இலக்கியத்தின் வெளிப்பாடாக வரும் தற்கால சிறுகதைகளில் பல மாற்றங்கள் ஏற்பட்டிருப்பினும், இவரது கதைகள் ஓர் இதமான வாசிப்பு அனுபவத்தைத் தருகின்றன.

பயணம் முடிவதில்லை-எம்.எஸ்.பெருமாள்: பக்.300;ரூ.300; வானதி பதிப்பகம், சென்னை-17: ✆044-24342810.

'அவள் ஒரு தொடர்கதை' திரைப்படத்தின் மூலக்கதை ஆசிரியரின் தொகுப்பு இது. 1961-ஆம் ஆண்டு முதல் வார, மாத, இதழ்களிலும், ஒலி-ஒளி ஊடகங்களிலும் சிறுகதை, குறுநாவல், நாடகம், கட்டுரை என தொடர்ந்து எழுதி வருபவர் எம்.எஸ்.பெருமாள். மொத்தம் 18 சிறுகதைகளைக் கொண்ட இத்தொகுப்பில் கதைகள் ஒவ்வொன்றும் வெவ்வேறு மாதிரியான களங்களைக் கொண்டிருக்கின்றன. கதை மாந்தர்களின் வட்டார வழக்கு எளிதாகப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

தனிக்குடித்தனத்திலும், கூட்டுக்குடும்பத்திலும் ஏற்படும் உறவு முறை சிக்கல்களும், பிற பிரச்னைகளும், சவால்களுமே கதைகளின் களங்களாக உள்ளன. குடும்பத் தலைவிகள் தங்களுடைய தியாகங்களாலும், பொறுமையாலும் பிரச்னைகளை எப்படிக் கையாள்கிறார்கள் என்பது பெரும்பாலான கதைகளில் சித்திரிக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு கதையும் தொடங்கும்போது உள்ள வேகமும், நடையும் இறுதி வரை தொய்வின்றி தொடர்வது சிறப்பு. வாசகர்கள் யூகிக்கும் எந்த முடிவையும் கதைக்குத் தந்து விடாமல் வேறொரு முடிவைத் தருவது ஆசிரியரின் வளமையான கற்பனை வளத்தைப் புலப்படுத்துகிறது.

இத்தொகுப்பின் முக்கிய அம்சமாக, கதைகள் வெளியான காலகட்டங்களில் இருந்த தமிழறிஞர்கள், எழுத்துலக ஆளுமைகள், பத்திரிகை உலக ஜாம்பவான்கள் மற்றும் இலக்கியத்தின் முக்கிய ஆர்வலர்களிடமிருந்து கடிதங்கள் வாயிலாக இவருக்கு வந்த பாராட்டுகளையும், விமர்சனங்களையும் கதைகளுக்கு இடையே பதிவேற்றியிருப்பது ஒரு மாறுபட்ட அணுகுமுறையாக உள்ளது.

நவீன இலக்கியத்தின் வெளிப்பாடாக வரும் தற்கால சிறுகதைகளில் பல மாற்றங்கள் ஏற்பட்டிருப்பினும், இவரது கதைகள் ஓர் இதமான வாசிப்பு அனுபவத்தைத் தருகின்றன.

முழு கட்டுரையைப் படிக்க →