அம்மா முதல் அயலான் வரை அடடே கதைகள்
அம்மா முதல் அயலான் வரை அடடே கதைகள் - யுவா; பக்.392; ரூ.444; சுட்டி மீடியா, சென்னை-45; ✆98409 69757.
எட்டாம் வகுப்பு படிக்கும்போதே சிறார் கதைகளை எழுதத் தொடங்கிய கே.யுவராசன் தனது புனைபெயரான 'யுவா' என்ற பெயரில், பல்வேறு இதழ்களில் எழுதிய கதைகளின் தொகுப்பு இந்த நூல். பழங்குடியினர்களின் வாழ்க்கைத் தரத்தை முன்னேற்றுவதற்காக 'அலை' என்ற அமைப்பை தனது நண்பர்களோடு இணைந்து நடத்தி வரும் அவர் பணிகளுக்கு இடையே தனது எழுத்துத் திறமையை வெளிப்படுத்திவருகிறார்.
அம்மா கதைகள், அப்பா கதைகள், அரசர் கதைகள், அஃறிணைக் கதைகள், அன்புக் கதைகள், அறிவுக் கதைகள், அஞ்சாமைக் கதைகள், அதிசயக் கதைகள் என்ற 8 தலைப்புகளில், அவை ஒவ்வொன்றிலும் தலா எட்டு கதைகளாக ஏற்கெனவே சிறுநூல்களாக வெளிவந்துள்ளன. சிறு நூல்களின் தொகுப்பே இந்த நூல்.
அறுபத்து நான்கு கதைகளும் தனித்துவத்தோடு இருக்கின்றன. சிறார்களிடம் அன்பு, அறிவு, ஆற்றல், இனிமை, ஈகை குணம், உழைப்பு, ஊருக்கு உழைத்தல், மூடநம்பிக்கைகளை விட்டொழித்தல்... என்று பல்வேறு தனித்திறன்களை வளர்க்கும் வகையிலும், அவர்களை ஊக்கப்படுத்தும் வகையிலும் இந்தக் கதைகள் இருக்கின்றன. பெரியோரை மதித்தல், ஆசிரியர்களுக்கு மரியாதை செய்தல், அச்சம் தவிர்த்தல் என்று தன்னம்பிக்கையை வளர்ப்பதோடு, அவர்களை எதிர்காலத்தில் சிறந்து விளங்கவைப்பதற்கான கதைகள்தான் இவை. சிறார்கள் கதைகள் என்று நினைத்துவிட முடியாமல், அனைத்துத் தரப்பினரும் படிக்கும் வகையில்தான் இந்தக் கதைகள் இருக்கின்றன. ஓவியர் அரஸின் சித்திரங்கள் கூடுதல் சிறப்பு.
கல்வி நிலையங்களின் நூலகங்களில் அவசியம் இடம் பெற வேண்டிய நூல் இது.
அம்மா முதல் அயலான் வரை அடடே கதைகள் - யுவா; பக்.392; ரூ.444; சுட்டி மீடியா, சென்னை-45; ✆98409 69757.
எட்டாம் வகுப்பு படிக்கும்போதே சிறார் கதைகளை எழுதத் தொடங்கிய கே.யுவராசன் தனது புனைபெயரான 'யுவா' என்ற பெயரில், பல்வேறு இதழ்களில் எழுதிய கதைகளின் தொகுப்பு இந்த நூல். பழங்குடியினர்களின் வாழ்க்கைத் தரத்தை முன்னேற்றுவதற்காக 'அலை' என்ற அமைப்பை தனது நண்பர்களோடு இணைந்து நடத்தி வரும் அவர் பணிகளுக்கு இடையே தனது எழுத்துத் திறமையை வெளிப்படுத்திவருகிறார்.
அம்மா கதைகள், அப்பா கதைகள், அரசர் கதைகள், அஃறிணைக் கதைகள், அன்புக் கதைகள், அறிவுக் கதைகள், அஞ்சாமைக் கதைகள், அதிசயக் கதைகள் என்ற 8 தலைப்புகளில், அவை ஒவ்வொன்றிலும் தலா எட்டு கதைகளாக ஏற்கெனவே சிறுநூல்களாக வெளிவந்துள்ளன. சிறு நூல்களின் தொகுப்பே இந்த நூல்.
அறுபத்து நான்கு கதைகளும் தனித்துவத்தோடு இருக்கின்றன. சிறார்களிடம் அன்பு, அறிவு, ஆற்றல், இனிமை, ஈகை குணம், உழைப்பு, ஊருக்கு உழைத்தல், மூடநம்பிக்கைகளை விட்டொழித்தல்... என்று பல்வேறு தனித்திறன்களை வளர்க்கும் வகையிலும், அவர்களை ஊக்கப்படுத்தும் வகையிலும் இந்தக் கதைகள் இருக்கின்றன. பெரியோரை மதித்தல், ஆசிரியர்களுக்கு மரியாதை செய்தல், அச்சம் தவிர்த்தல் என்று தன்னம்பிக்கையை வளர்ப்பதோடு, அவர்களை எதிர்காலத்தில் சிறந்து விளங்கவைப்பதற்கான கதைகள்தான் இவை. சிறார்கள் கதைகள் என்று நினைத்துவிட முடியாமல், அனைத்துத் தரப்பினரும் படிக்கும் வகையில்தான் இந்தக் கதைகள் இருக்கின்றன. ஓவியர் அரஸின் சித்திரங்கள் கூடுதல் சிறப்பு.
கல்வி நிலையங்களின் நூலகங்களில் அவசியம் இடம் பெற வேண்டிய நூல் இது.