முகப்பு
நூல் அரங்கம்

உணர்வு சூழ் உலகம்

மனித வாழ்க்கையில் அன்றாடம் எதிர்கொள்ளும் சவால்களையும் சிக்கல்களையும் மிகச் சாதாரணமாக கடந்து போக வலியுறுத்துகிறது இந்நூல்.

Updated On : 9 செப்டம்பர், 2025 at 5:15 AM
பகிர்:

உணர்வு சூழ் உலகம் - யாமினி; பக்.108; ரூ.150; ஹெர் ஸ்டோரிஸ், சென்னை-83; ✆ 96003 98660.

உணர்வுகளை வெளிக்காட்டுவது தவறு என்று நமக்குப் போதிக்கப்பட்டிருப்பதால், உணர்வுகளைப் பிறரிடம் பகிர்ந்து கொள்ள முடியாமல், இறுதியில் ஒரு கட்டத்தில் அவை வெடித்துவிடுகின்றன. அதற்குப் பதிலாக, உணர்வுகளைச் சரியானமுறையில் வெளிப்படுத்தும்போதுதான் நம்மால் நம் இலக்கை மிக எளிதாக அடையலாம் என்கிறார் நூலாசிரியர்.

மகிழ்ச்சியோ, துக்கமோ, கோபமோ இவை போன்ற எந்த உணர்ச்சியையும் அவசரப்பட்டு வெளிப்படுத்தாமல் ஒரு சில நொடிகள் நிதானித்து திட்டமிட்டுப் பதில் வினையாற்றுவதுதான் எல்லாவற்றுக்குமான சிறந்த உணர்வுசார் நுண்ணறிவாக இருக்கும் என்று வலியுறுத்துகிறது இந்நூல்.

இந்நூலில் மனிதர்களை அவர்களுடைய குணத்தின் அடிப்படையில், முரடர், அடி பணிபவர், ஏற்றுக்கொள்பவர் என மூன்றுவிதமாகப் பிரித்து அம்மூன்று குணங்களின் விளைவுகளை ஒரு சிறுகதையாகச் சொல்லி அவற்றில் எது சிறந்தது என்பது புரிய வைக்கப்பட்டுள்ளது.

உணர்வு சார் நுண்ணறிவு என்பது தன்னை அறிவது, தன்னை நேசிப்பது என்பதில் தொடங்குவதாகக் கூறும் நூலாசிரியர், நடக்கும் நிகழ்வை எந்த முன் முடிவும் இல்லாமல், ஒரு சம்பவமாக பார்வையிட்டு நிதானித்து உணர்வைக் கையாளும்படி கூறுகிறார்.

மனித வாழ்க்கையில் அன்றாடம் எதிர்கொள்ளும் சவால்களையும் சிக்கல்களையும் மிகச் சாதாரணமாக கடந்து போக வலியுறுத்துகிறது இந்நூல்.

உணர்வு சூழ் உலகம் - யாமினி; பக்.108; ரூ.150; ஹெர் ஸ்டோரிஸ், சென்னை-83; ✆ 96003 98660.

உணர்வுகளை வெளிக்காட்டுவது தவறு என்று நமக்குப் போதிக்கப்பட்டிருப்பதால், உணர்வுகளைப் பிறரிடம் பகிர்ந்து கொள்ள முடியாமல், இறுதியில் ஒரு கட்டத்தில் அவை வெடித்துவிடுகின்றன. அதற்குப் பதிலாக, உணர்வுகளைச் சரியானமுறையில் வெளிப்படுத்தும்போதுதான் நம்மால் நம் இலக்கை மிக எளிதாக அடையலாம் என்கிறார் நூலாசிரியர்.

மகிழ்ச்சியோ, துக்கமோ, கோபமோ இவை போன்ற எந்த உணர்ச்சியையும் அவசரப்பட்டு வெளிப்படுத்தாமல் ஒரு சில நொடிகள் நிதானித்து திட்டமிட்டுப் பதில் வினையாற்றுவதுதான் எல்லாவற்றுக்குமான சிறந்த உணர்வுசார் நுண்ணறிவாக இருக்கும் என்று வலியுறுத்துகிறது இந்நூல்.

இந்நூலில் மனிதர்களை அவர்களுடைய குணத்தின் அடிப்படையில், முரடர், அடி பணிபவர், ஏற்றுக்கொள்பவர் என மூன்றுவிதமாகப் பிரித்து அம்மூன்று குணங்களின் விளைவுகளை ஒரு சிறுகதையாகச் சொல்லி அவற்றில் எது சிறந்தது என்பது புரிய வைக்கப்பட்டுள்ளது.

உணர்வு சார் நுண்ணறிவு என்பது தன்னை அறிவது, தன்னை நேசிப்பது என்பதில் தொடங்குவதாகக் கூறும் நூலாசிரியர், நடக்கும் நிகழ்வை எந்த முன் முடிவும் இல்லாமல், ஒரு சம்பவமாக பார்வையிட்டு நிதானித்து உணர்வைக் கையாளும்படி கூறுகிறார்.

மனித வாழ்க்கையில் அன்றாடம் எதிர்கொள்ளும் சவால்களையும் சிக்கல்களையும் மிகச் சாதாரணமாக கடந்து போக வலியுறுத்துகிறது இந்நூல்.

முழு கட்டுரையைப் படிக்க →