முகப்பு
நூல் அரங்கம்

அயல் மகரந்தம் : அ.முத்துலிங்கம் கட்டுரைகள்

சிற்பியின் ஒவ்வொரு கட்டுரையிலும் அவருடைய ஆழமான வாசிப்பு வெளிப்படுகிறது.

Updated On : 9 செப்டம்பர், 2025 at 5:15 AM
பகிர்:

அயல் மகரந்தம் : அ.முத்துலிங்கம் கட்டுரைகள் - ஒரு பார்வை சிற்பி பாலசுப்பிரமணியம்; பக்.128, ரூ.150, விஜயா பதிப்பகம், கோயம்புத்தூர்; 0422 - 2382614.

இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட பக்கங்களில் இரு பெருந்தொகுதிகளாக வெளிவந்த எழுத்தாளர் அ. முத்துலிங்கத்தின் கட்டுரைகளைப் பற்றி அறிமுகமாகவும் விமர்சனமாகவும் எழுதப்பட்டுள்ள நூல்.

படைப்பிலக்கியத்தின் மொழியையும் வடிவத்தையும் எடுத்துக்கொண்டு ஒரு சிறுகதையாளர் எழுதியுள்ள இந்தக் கட்டுரைகளைத் தனித்தனித் தலைப்புகளில் வகைப்படுத்தித் தம் பார்வையில் முன்வைக்கிறார் ஆசிரியர்.

பாரதி, புதுமைப்பித்தன், ஜெயகாந்தன், நாஞ்சில்நாடன் என நால்வரைக் கட்டுரை வித்தகர்களாக அறிமுகப்படுத்தும் நூலாசிரியர், ஐந்தாவதாக முத்துலிங்கத்தை இவர்களினும் வேறுபட்ட திறன்களுக்கு அடையாளமாக விளங்குபவர் என வரையறுக்கிறார்.

ஆப்பிரிக்கா பற்றிய முத்துலிங்கத்தின் எழுத்துகளை வாசிக்கத் தரும்போது, சோமாலியாவின் இருபது நாள்கள் கணக்கைப் போல உள்ளம் உருக்கும் பல தகவல்களைத் தருகிறார்.

புத்தகப் பிரபஞ்சத்தின் வழி எண்ணற்ற அறிந்த, அறியாத எழுத்தாளர்களும் அவர்களின் புகழ்பெற்ற எழுத்துகளும் எழுத வாய்த்த சூழ்நிலைகளும் தெரிவிக்கப்படுகின்றன.

உள்ளம் கவர் புள்ளிகளில் பல்வேறு எழுத்தாளர்களிலிருந்து நடிகை பத்மினி வரையிலும் எண்ணற்றோரைக் குறிப்பிட்டு, சிவாஜியை திருமணம் செய்துகொள்ளாததற்கு பத்மினி கூறிய காரணத்தையும் கட்டுரையிலிருந்து எடுத்துக்காட்டுகிறார் ஆசிரியர்.

மொழியின் விளையாட்டில் ஆவலான வதை போன்ற முத்துலிங்கத்தின் சொற்கோவைகள் தேடித் தேடித் தரப்படுகின்றன. சிற்பியின் ஒவ்வொரு கட்டுரையிலும் அவருடைய ஆழமான வாசிப்பு வெளிப்படுகிறது.

அ. முத்துலிங்கத்தின் பல்வேறு முகங்களையும் காட்டும் கட்டுரைகளை அறிமுகப்படுத்தி வாசிக்க வழிகாட்டுகிறது இந்த நூல்.

அயல் மகரந்தம் : அ.முத்துலிங்கம் கட்டுரைகள் - ஒரு பார்வை சிற்பி பாலசுப்பிரமணியம்; பக்.128, ரூ.150, விஜயா பதிப்பகம், கோயம்புத்தூர்; 0422 - 2382614.

இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட பக்கங்களில் இரு பெருந்தொகுதிகளாக வெளிவந்த எழுத்தாளர் அ. முத்துலிங்கத்தின் கட்டுரைகளைப் பற்றி அறிமுகமாகவும் விமர்சனமாகவும் எழுதப்பட்டுள்ள நூல்.

படைப்பிலக்கியத்தின் மொழியையும் வடிவத்தையும் எடுத்துக்கொண்டு ஒரு சிறுகதையாளர் எழுதியுள்ள இந்தக் கட்டுரைகளைத் தனித்தனித் தலைப்புகளில் வகைப்படுத்தித் தம் பார்வையில் முன்வைக்கிறார் ஆசிரியர்.

பாரதி, புதுமைப்பித்தன், ஜெயகாந்தன், நாஞ்சில்நாடன் என நால்வரைக் கட்டுரை வித்தகர்களாக அறிமுகப்படுத்தும் நூலாசிரியர், ஐந்தாவதாக முத்துலிங்கத்தை இவர்களினும் வேறுபட்ட திறன்களுக்கு அடையாளமாக விளங்குபவர் என வரையறுக்கிறார்.

ஆப்பிரிக்கா பற்றிய முத்துலிங்கத்தின் எழுத்துகளை வாசிக்கத் தரும்போது, சோமாலியாவின் இருபது நாள்கள் கணக்கைப் போல உள்ளம் உருக்கும் பல தகவல்களைத் தருகிறார்.

புத்தகப் பிரபஞ்சத்தின் வழி எண்ணற்ற அறிந்த, அறியாத எழுத்தாளர்களும் அவர்களின் புகழ்பெற்ற எழுத்துகளும் எழுத வாய்த்த சூழ்நிலைகளும் தெரிவிக்கப்படுகின்றன.

உள்ளம் கவர் புள்ளிகளில் பல்வேறு எழுத்தாளர்களிலிருந்து நடிகை பத்மினி வரையிலும் எண்ணற்றோரைக் குறிப்பிட்டு, சிவாஜியை திருமணம் செய்துகொள்ளாததற்கு பத்மினி கூறிய காரணத்தையும் கட்டுரையிலிருந்து எடுத்துக்காட்டுகிறார் ஆசிரியர்.

மொழியின் விளையாட்டில் ஆவலான வதை போன்ற முத்துலிங்கத்தின் சொற்கோவைகள் தேடித் தேடித் தரப்படுகின்றன. சிற்பியின் ஒவ்வொரு கட்டுரையிலும் அவருடைய ஆழமான வாசிப்பு வெளிப்படுகிறது.

அ. முத்துலிங்கத்தின் பல்வேறு முகங்களையும் காட்டும் கட்டுரைகளை அறிமுகப்படுத்தி வாசிக்க வழிகாட்டுகிறது இந்த நூல்.

முழு கட்டுரையைப் படிக்க →