முகப்பு
நூல் அரங்கம்

செவ்விலக்கியமும் சித்தர் இலக்கியமும்

சங்க இலக்கியங்களில் காணப்படும் உவமை, உருவகம் போன்றவை சித்தர் படைப்புகளிலும் இடம்பெற்றுள்ளன.

Updated On : 9 மார்ச், 2026 at 7:18 AM
பகிர்:

செவ்விலக்கியமும் சித்தர் இலக்கியமும்-முனைவர் கோ.வெங்கடேசன்; பக்.256; ரூ.320; வைரமுல்லை பப்ளிஷர்ஸ், தஞ்சாவூர்-613 007, ✆ 97905 79163.

தமிழர்களின் பண்பாட்டு முதிர்ச்சியை உலகுக்கு உணர்த்திக் கொண்டிருப்பவை சங்க இலக்கியங்கள் என்றால், தமிழ் மெய்யியல் மரபு குறித்த புரிதலுக்கு சித்தர் இலக்கியங்கள் பயன்படுகின்றன. சங்க இலக்கியங்கள், சித்தர் பாடல்களை ஒப்பிட்டு அவை கூறும் கருத்துகள் இந்த நூலில் நயம்பட எடுத்துரைக்கப்பட்டுள்ளன.

இல்லறத்தில் இருந்து கொண்டே அறவழியில் வாழ்ந்து பொருளீட்டி அளவோடு இன்பம் துய்த்து வீடுபேறு அடையலாம் என்பதற்கான வழிமுறைகளை சங்க இலக்கியமும், சித்தர்கள் படைப்புகளும் கூறுவதை சங்கப் பாடல்கள், சித்தர் பாடல்களுடன் ஒப்புமைப்படுத்தி ஆய்வு நோக்கில் தெளிவாக எடுத்துரைத்துள்ளார் நூலாசிரியர்.

நிலையாமையைப் பாடி வீடுபேற்றை அடையும் வழியை சங்கப் புலவர்கள் வலியுறுத்தினார்கள்; 'தானே தன்னை அறிதல்' என்ற உண்மை நிலையை சித்தர்கள் தங்கள் படைப்புகள் வாயிலாக உணர்த்துகின்றனர். சங்க இலக்கியங்கள், சித்தர் படைப்புகளில் நிலையாமைத் தத்துவங்கள் பாடப்பட்டதன் நோக்கம் மக்கள் நற்கதி அடையவும், பிறவிக் கடலை நீந்தவும், பிறவா நிலையை அடையவும் உதவும் என்பது தெரிய வருகிறது.

சங்க இலக்கியங்களில் காணப்படும் உவமை, உருவகம் போன்றவை சித்தர் படைப்புகளிலும் இடம்பெற்றுள்ளன. இலக்கண மரபுகளும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளன. மக்களின் மனதைப் பண்படுத்த, நல்வழிப்படுத்தும் கருத்துகளையே சங்க இலக்கியங்களும், சித்தர் படைப்புகளும் வலியுறுத்துகின்றன என்பது தெளிவாகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →