முகப்பு
நூல் அரங்கம்

வெளிக்குள் வெளிகடந்து

இறைவனை அடைய தேர்ந்தெடுக்கும் பாதை எதுவானாலும் அந்தப் பாதைக்கு வெளிச்சம் காட்டுவது 'அன்பு' எனும் அற்புத விளக்குதான். இந்த உண்மையை உணர்த்துவதாக இருக்கிறது கையடக்க ஏடாக வந்திருக்கும் இந்த மெய் விளக்க நூல்.

Updated On : 23 மார்ச், 2026 at 12:20 PM
பகிர்:

வெளிக்குள் வெளிகடந்து - பின்னலூர் மு.விவேகானந்தன், பக். 128; ரூ. 125; இராமலிங்கர் இலக்கிய மன்றம், சென்னை-600 126, ✆ 94441 78460.

அண்டத்திலிருப்பது பிண்டத்தில்; பிண்டத்தில் இருப்பது அண்டத்தில். இதன் சூட்சுமத்தை உணர்ந்துவிட்டால் கர்மா, விதி குறித்த சந்தேகக் கேள்விகள் ஏதுமில்லை. பஞ்சபூதங்களால் ஆனது உலகம். அதேபோல், இந்த உடம்பும் பஞ்சபூதங்களால் ஆனதுதான். அதில் முக்கியமானது ஆகாயம் எனும் வெளி. இதைத்தான் சித்தர்கள் தங்கள் பாடல்கள் மூலம் விளக்கியுள்ளனர்.

கடவுள் யார்? அவரின் இருப்பிடம் எது? அவரின் தோற்றம் மற்றும் தன்மை என்ன என்பன உள்ளிட்ட பல கேள்விகளுக்கு உலகம் முழுக்க பல்வேறு விளக்கங்கள் கொடுக்கப்பட்டாலும் தமிழ் மெய்யியல் காட்டும் விளக்கம் எந்தக் காலத்துக்கும் பொருந்தும்.

மெய்ஞான அறிஞர்கள் திருமூலர், வள்ளலார், தாயுமான சுவாமிகள் இன்னும் பிற சித்தர்கள் காட்டிய பாடல்கள், விளக்கங்களுடன் எளிமையாகப் படைக்கப்பட்டுள்ள நூல் இது.

வள்ளலாரின் தத்துவங்கள் மடை மாற்றம் செய்யப்படுவதைத் தவிர்க்கவே இந்த நூல் படைக்கப்பட்டது என்கிறார் நூலாசிரியர். பரவெளியில் -ஆகாயத்தைக் காட்டி, மனவெளியில்-மன ஆகாயத்தைக் காட்டி, இடையறாது இரங்கி வேண்டினால் இறைவனின் சுகாதீத நிலையைக் காணலாம் என்கிற உச்ச ரகசிய ஞானத்தை வாசிக்க நேரும்போது ஒற்றைப்புள்ளியில் எல்லாம் விளங்குகிறது.

இறைவனை அடைய தேர்ந்தெடுக்கும் பாதை எதுவானாலும் அந்தப் பாதைக்கு வெளிச்சம் காட்டுவது 'அன்பு' எனும் அற்புத விளக்குதான். இந்த உண்மையை உணர்த்துவதாக இருக்கிறது கையடக்க ஏடாக வந்திருக்கும் இந்த மெய் விளக்க நூல்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.