நவராத்திரி ஒன்பதாம் நாளின் அம்பாள் பெயர், உருவ அமைப்பு, குணம், சிறப்பு, நெய்வேத்யம், பூஜை செய்ய சிறந்த நேரம், எந்த நக்ஷத்ரங்களில் பிறந்தவர்கள் வணங்க வேண்டும், எண் ஜோதிடப்படி யாரெல்லாம் வணங்க வேண்டும், எந்த திசை புத்தி அந்தரம் நடப்பவர்கள் வணங்க வேண்டும், எந்த ஜாதக அமைப்பு உடையவர்கள் வணங்க வேண்டும், சொல்ல வேண்டிய மந்திரம், மூல மந்திரம், காயத்ரி போன்ற அனைத்து விஷயங்களும் அடங்கியது.
அம்பாள்: ஸ்ரீபிராஹ்மி
உருவ அமைப்பு: அன்ன வாகனம், கையில் ஏடு, ஜெபமாலை, கமண்டலம் கொண்டவள். நான்கு முகம் உடையவள்.
குணம்: சௌம்யம்
சிறப்பு: ஸ்ரீபிரும்மாவின் அம்சம்
நைவேத்யம்: சர்க்கரைப் பொங்கல், சுண்டல், பால் பாயாசம்
பூஜை செய்ய உகந்த நேரம்: காலை 9 - 10.30, மாலை 6 – 7.30
மலர்: மல்லிகை, செம்பருத்தி, கேந்தி
கொடுக்க வேண்டிய தாம்பூலங்கள்: 11
பாட வேண்டிய ராகம்: கானடா, குறிஞ்சி
யார் யாரெல்லாம் வணங்க வேண்டும்:
வணங்க வேண்டிய நக்ஷத்ரகாரர்கள்:ரோகினி, ஹஸ்தம், திருவோணம்
திசை புத்தி நடப்பவர்கள்: சூரியன் திசை அல்லது புத்தி அல்லது அந்தரம்
ஜாதக அமைப்பு உடையவர்கள்: லக்னம், கேந்திரம், திரிகோணத்தில் சூரியன் அல்லது ராகு இருப்பவர்கள்
விசேஷம்: வித்யாதாரிணி - கல்வி, வித்தைகளுக்கு அதிபதி
எண் கணிதப் படி யாரெல்லாம் வணங்க வேண்டும்: பெயர் எண் 1 உடையவர்கள்
சொல்ல வேண்டிய பாடல்:
[1] தனந்தரும்; கல்வி தரும்; ஒருநாளும் தளர்வறியா
மனந்தரும்; தெய்வ வடிவுந்தரும்; நெஞ்சில் வஞ்சமில்லா
இனந்தரும்; நல்லன எல்லாம் தரும்; அன்பர் என்பவர்க்கே
கனந்தரும் பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே.
[2] மூல மந்திரம்: ஓம் - சிம் - பிராஹ்மயே - நம :
[3] காயத்ரி: ஓம் தேவி பிராம்யை வித்மஹே மஹா சக்த்யைச தீமஹி தந்தோ தேவி பிரசோதயாத்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.