அப்பர் சுவாமிகளின் குருபூஜை விழா
திருவண்ணாமலையில் அப்பர் சுவாமிகளின் சித்திரை சதய குருபூஜை விழா கோலாகலமாக நடைபெற்றது.
திருவண்ணாமலையில் அப்பர் சுவாமிகளின் சித்திரை சதய குருபூஜை விழா கோலாகலமாக நடைபெற்றது.
திருவண்ணாமலை, சன்னதி தெருவில் உள்ள அப்பர் சுவாமிகள் திருமடத்தில் செவ்வாய்க்கிழமை இந்த விழா நடைபெற்றது. இதையொட்டி, காலை 9 மணிக்கு ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயிலில் அப்பர் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம்-அலங்காரம் நடைபெற்றது.
காலை 11.30 மணிக்கு அப்பர் சுவாமிகள் மடத்தில் அப்பர் சுவாமிகளின் சித்திரை சதய குருபூஜை விழாவும், அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. மாலை 3.30 மணிக்கு திருநாவுக்கரசு தெரு, வேடியப்பன் கோயில் தெரு, செல்லநேரித் தெரு உள்ளிட்ட நகரின் முக்கிய வீதிகளில் அப்பர் சுவாமிகளின் வீதியுலா நடைபெற்றது.
இந்த விழாவில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். குருபூஜைக்கான ஏற்பாடுகளை அப்பர் சுவாமிகள் திருமடத்தின் நிர்வாகிகள், பக்தர்கள் செய்திருந்தனர்.