ஆன்மிகம்

அம்பத்தூர் வாசிகளுக்கு ஒரு அலர்ட்: ராகு-கேது பெயர்ச்சி சிறப்பு ஹோமம் - ஸங்கல்பம் இலவசம்

தினமணி

அம்பத்தூர் மௌனசாமி மடம் தெருவில் ஸ்ரீவித்யா காயத்ரி அறக்கட்டளை - ருத்ர பரிஹார் ரக்ஷா சென்டர் மற்றும் Seythigal.in இணைந்து ராகு கேது பெயர்ச்சி சிறப்பு லக்ஷ ஆவர்த்தி ஹோமம் நடத்தப்படுகின்றது.

நிகழும் மங்களகரமான ஹேவிளம்பி வருடம் தக்ஷிணாயனம் ஆடி மாதம் 11-ம் தேதி (27-7-2017) வியாழக்கிழமை அன்று சுக்ல சதுர்த்தியும், உத்திர நக்ஷத்ரமும் சித்த யோகமும் கூடிய சுபயோக சுபதினத்தில் உதயாதி நாழிகை 16.48-க்கு பகல் 12.48-க்கு துலா லக்னத்தில் ராகு பகவான் சிம்ம ராசியிலிருந்து கடக ராசிக்கும், கேது பகவான் கும்ப ராசியிலிருந்து மகர ராசிக்கும் பெயர்ச்சி ஆகிறார்கள். இந்த சிறப்பு ஹோமத்தை பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் நடத்தி வைக்கின்றார்.

பெயர்ச்சியால் நன்மை அடையும் ராசிகள்:
மேஷம், சிம்மம், கன்னி, துலாம், தனுசு, கும்பம்

பெயர்ச்சியால் பரிகாரத்தின் மூலம் நன்மை அடையும் ராசிகள்:
ரிஷபம், மிதுனம், கடகம், விருச்சிகம், மகரம், மீனம்

ஹோமத்தில் கலந்துகொள்ள எவ்வித கட்டணமும் இல்லை
ஹோமத்திற்கு நல்லெண்ணெய், அரிசி, தேங்காய், நெய் போன்றவை கொடுப்பதால் நமக்கு நன்மைகள் பெருகும். முடிந்தோர் செய்து பயன்பெறலாம். பொருளுதவியாக கொடுக்க நினைப்போர் தொலைபேசியில் தொடர்பு கொள்ளவும். நட்சத்திரம் மற்றும் கோத்திரம் இருப்பின் அவற்றை ramjothidar@gmail.com என்ற இ-மெயிலுக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். அனைவரும் ஹோம பிரசாதம், தன ஆகர்ஷணத்தை ஏற்படுத்தும் சிகப்பு சந்தன செட் மற்றும் மந்திரித்த முடிக்கயிறு அனுப்பி வைக்கப்படும்.

குறிப்பு:
• இந்த ஹோமத்தில் அனைவரும் ஸங்கல்பம் செய்து கொள்ளலாம். இதில் கலந்து கொள்ள எந்தவித கட்டணமும் கிடையாது.

• ஹோமம் மற்றும் அன்னதானத்திற்கு பொருளுதவி மற்றும் பண உதவி செய்யலாம்.

• ஹோமத்தில் ஸங்கல்பம் செய்து கொள்ளும் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்படும்.

• வெளியூரில் இருக்கும் நபர்களுக்கு ஸங்கல்பம் செய்து பிரசாதம் தபாலில் இலவசமாக அனுப்பி வைக்கப்படும்.

• ஹோமத்தில் பங்கு பெறும் அனைவருக்கும் பிரசாதத்துடன் செல்வ நிலை மேலோங்க தன ஆகர்ஷண சந்தன பாக்கெட் அளிக்கப்படும்.

திருமணத்தடை நீங்க, சந்தான பாக்கியம் கிடைக்க, வெளிநாடு செல்வதற்கு உள்ள தடை அகல, வீடு மனை வாங்குவதற்கு இருக்கும் சுணக்கம் நீங்குவதற்கு, குழந்தைகளின் கல்வி வளர்ச்சி பெற, கடன் பிரச்னைகள் தீர்வதற்கு, தீராத நோய்கள் தீர்வதற்கு போன்ற அனைத்து பிரச்னைகள் தீர்வதற்கும் ஸங்கல்பத்தில் கலந்து கொள்வது சிறந்தது.

அதியற்புத மூலிகைகளை கொண்டு செய்யப்படும் மஹா ஹோமம் இது. அனைவரும் கலந்து கொண்டு வாழ்வில் நன்மைகள் பெருகச் செய்வோம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தனக்குத்தானே பிரசவம்- குழந்தையைக் கொன்ற செவிலியர் கைது

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழைப்பொழிவு விவரம்!

பாஜகவின் இஸ்லாமிய வெறுப்பு... கண்டுகொள்ளாத தேர்தல் ஆணையம்!

ரோமியோ ஓடிடி தேதி!

நெல்லை மாவட்ட காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமாரின் உடல் நல்லடக்கம்

SCROLL FOR NEXT