முகப்பு
ஆன்மிகம்

திருவதிகை சரநாராயண பெருமாள் கோயிலில் வருண ஜப பூஜை

பண்ருட்டி திருவதிகை சரநாராயண பெருமாள் கோயிலில் மழை வேண்டி வருண ஜப பூஜைகள் இன்று நடைபெற்றது.

Updated On : 29 ஜனவரி, 2024 at 2:34 PM
பகிர்:

பண்ருட்டி திருவதிகை சரநாராயண பெருமாள் கோயிலில் மழை வேண்டி வருண ஜப பூஜைகள் இன்று நடைபெற்றது. இதில் தொழில்துறை அமைச்சர் எம்.சி சம்பத் மற்றும் அதிமுக நிர்வாகிகள்,  பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டனர்.

காலை 6 மணிக்கு நித்தயபடி பூஜையும், 7 மணிக்கு விஷ்ணு சகஸ்ரநாம அர்ச்சனையும், 7.30-க்கு யாக சாலை பூஜையும் நடத்தப்பட்டது. பின்னர் வருண மூல மந்திரம் 1008 முறை கூறி 7 பட்டாச்சாரியார்கள் வருண ஜெபம் நடத்தினர்.

மூலிகை திரவியங்களை கொண்டு யாக சாலை பூஜை நடத்தப்பட்டது. 9 கலசங்கள் வைத்து வருண பகவானின் வேத மந்திரம் கூறி வேண்டினர். நாதஸ்வரம் மூலம் அமிர்த்தவர்ஷினி யாகம் வளர்த்து (ஆண்டாள் பாடி அருளிய ஆழி மலை கண்ணா) பாசுரத்தைப் பாடி கூட்டு பிராத்தனை நடத்தப்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →