முகப்பு
ஆன்மிகம்

எந்த தெய்வத்தை வணங்கினால் என்ன குறை தீரும்?

நாம் நினைத்த காரியம் நிறைவேறவும், நமக்கு இருக்கும் பிரச்னைகள் தீரவும் அதற்கேற்ற தெய்வத்தை வணங்கினால் நல்ல பலன் கிடைக்கும்.

Updated On : 2 அக்டோபர் 2017, 12:18 pm IST
பகிர்:

நாம் நினைத்த காரியம் நிறைவேறவும், நமக்கு இருக்கும் பிரச்னைகள் தீரவும் அதற்கேற்ற தெய்வத்தை வணங்கினால் நல்ல பலன் கிடைக்கும். ஆகையால் எந்தத் தெய்வத்தை வணங்கினால் என்ன குறை தீரும் என்பதை பற்றிப் பார்ப்போம்.

• விக்னங்கள், இடையூறுகள் நீங்க விநாயகப் பெருமானை வணங்கலாம். 

• வீட்டில் செல்வம் சேர ஸ்ரீ மகாலட்சுமி, ஸ்ரீநாராயணரை வணங்கலாம். 

Advertisement

Advertisement

• அழியாச் செல்வம், ஞானம், சக்தி பெற சிவபெருமானுக்கு உகந்த சிவஸ்துதியை துதிக்கலாம். 

• கல்வியில் சிறந்து விளங்க சரஸ்வதி தேவியை வணங்கலாம். 

• திருமணத் தடை நீங்க ஸ்ரீகாமாட்சி அம்மன், துர்க்கை அம்மனை வழிபடலாம். 

•  மாங்கல்யம் நிலைக்க - மங்கள கௌரியை வழிபடலாம். 

• புத்திர பாக்கியம் பெற சந்தான கிருஷ்ணன், சந்தான லட்சுமியை ஆராதிக்கலாம். 

• புதிய தொழில் துவங்க ஸ்ரீ கஜலட்சுமியை வணங்கலாம். 

• தொழில் சிறந்து லாபம் பெற திருப்பதி வெங்கடாசலபதியை வழிபடலாம். 

• வீடும், நிலம் பெற ஸ்ரீ சுப்ரமண்யர், செவ்வாய் பகவானை வணங்கலாம். 

• பில்லி, சூனியம், செய்வினை அகல ஸ்ரீவீரமாகாளி, ஸ்ரீநரசிம்மரை வழிபடலாம். 

• நோய் தீர ஸ்ரீதன்வந்தரி, தட்சிணாமூர்த்தியை வணங்கலாம். 

• ஆயுள், ஆரோக்கியம் பெற ருத்திரனை வழிபடலாம். 

• மனவலிமை, உடல் வலிமை பெற  ராஜராஜேஸ்வரி, ஸ்ரீஆஞ்சநேயரை வழிபடலாம். 

• விவசாயம் தழைக்க  ஸ்ரீ தான்யலட்சுமியை வணங்கலாம். 

• உணவுக் கஷ்டம் நீங்க  ஸ்ரீ அன்னபூரணியை வழிபடலாம். 

• பகைவர் தொல்லை நீங்க திருச்செந்தூர் முருகனை வணங்கலாம். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments