ஆன்மிகம்

இவர்களை சனி பகவான் நெருங்குவதில்லையாம்!

தினமணி

நவக்கிரகங்களில் மிகவும் முக்கியமான கிரகமாக திகழ்பவர் சனி பகவான். பொதுவாக சனீஸ்வரன் யாரையெல்லாம் பாதிப்பதில்லை என்று பார்ப்போம்.

• நமசிவாய எனும் நாமம் உச்சரிப்பவர்களை சனி பாதிப்பதில்லையாம். 

• பாவவினைகளுக்கு பரிகார மருந்து பிரதோஷ வழிபாடு. அதைத் தடையின்றி செய்பவர்களை சனி தண்டிப்பதில்லையாம். 

• காகத்திற்கு அன்னம் அளிப்பவர்கள், பித்ரு கடன் சரிவர செய்பவர்களை சனி பகவானின் கருணை பார்வை நம் மீது படுமாம். 

•  கருப்பு காராம்பசுவின் பால், நெய், தயிர் இவற்றுடன் பூஜிப்பவர்களை சனி பகவானுக்கு மிகவும் பிடிக்குமாம். அவர்களை சோதிப்பாரே தவிரப் பாதிப்பதில்லையாம். 

• அனுதினம் சிவபூஜை செய்யும் ஆச்சாரியார்கள், சீலர்களை சனி பகவான் நேசிப்பாராம். 

• சுத்தமும் சுகாதாரமும் நிறைந்தவர்கள், மற்றவரை அல்லல்படுத்தி ஆனந்தப்படாதவர்களை பீடிக்கும் காலத்திலும் பாவமன்னிப்பு அளித்து நம்மைப் பாதுகாப்பாராம். 

• சத்தியம் தவறாதவர்கள் மனதில் நித்திய வாசம் செய்வாள் மஹாலக்ஷ்மி என்பார்கள். அந்த திருமகள் இருக்கும் இடத்தைத் திரும்பிக்கூட பார்ப்பதில்லையாம் சனி பகவான். அதாவது சத்தியம் தவறாதவரை.

•  சனிக்கிழமை விரதமிருப்பதும், சுதர்சன எந்திர வழிபாடு செய்வதும் சனிக்கு பிடித்தமான ஒன்று.

• எள் கலந்த அன்னம் வைத்து எந்நாளும் துதிப்பவரை சனி நெருங்குவதே இல்லை.

•. வலம்புரி சங்கு உள்ள இல்லம், சாலகிராமத்தை பூஜிப்பவர்களை சனி படுத்துவதில்லையாம்.

•  ருத்ராட்சம் அணிந்தவர்களை ருத்திர பிரியரான சனி பீடிப்பதில்லையாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அஜித் படத்தில் சிம்ரன், மீனா?

மரத்தில் கார் மோதி விபத்து: தாயுடன் மகன் பலி

கல்பனா சோரன் வேட்புமனுத் தாக்கல்!

கோடை விடுமுறை: ஏப். 30-ல் வண்டலூர் உயிரியல் பூங்கா திறந்திருக்கும்!

விஷமான சிக்கன் ஷவர்மா: 12 பேர் மருத்துவமனையில் அனுமதி!

SCROLL FOR NEXT