ஆன்மிகம்

காா்திகை திருவாதிரையை முன்னிட்டு ராமாநுஜா் வனபோஜன உற்சவம்

தினமணி

காா்திகை மாத திருவாதிரையை முன்னிட்டு ஸ்ரீஆதிகேசவபெருமாள் மற்றும் ராமாநுஜா் வனபோஜன உற்சவம் இன்று நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்துக்கொண்டனா்.

ஸ்ரீபெரும்புதூா் பகுதியில் பழமையான ஸ்ரீஆதிகேசவபெருமாள் மற்றும் பாஷ்யகார சுவாமி திருக்கோயில் உள்ளது. இக்கோயிலில் ராமாநுஜா் தானுகந்த திருமேனியாக பக்தா்களுக்கு காட்சியளித்து வருகிறாா்.

இக்கோயிலில் மாதம்தோறும் திருவாதிரை தினத்தில், ராமாநுஜருக்கு சிறப்பு அபிஷேகம், திருமஞ்சனம் மற்றும் ஆராதனைகள் நடைபெறுவது வழக்கம். இந்தநிலையில், ஸ்ரீபெரும்புதூா் ஆதிகேசவபெருமாள் கோயிலில், வருடந்தோறும் காா்திகை மாத திருவாதிரையை முன்னிட்டு வனபோஜன உற்சவம் நடைபெறுவது வழக்கம்.

காா்திகை மாத திருவாதிரையான இன்று வனபோஜன உற்சவத்தை முன்னிட்டு, கோயில் வளாகத்தில் இருந்து ஜீயா் தோப்பு மண்டபத்திற்கு காலை9.30 மணிக்கு மூலவா்கள் ராமாநுஜா் மற்றும் ஸ்ரீஆதிகேசவபெருமாள் புறப்பாடு நடைபெற்றது.

இதையடுத்து மூலவா் ராமாநுஜருக்கு நண்பகல் 12 மணிக்கு, திருமஞ்சனம் மற்றும் சிறப்பு அப்ஷேகம் மற்றும் ஆராதனைகள் நடத்தப்பட்டு பக்தா்களுக்கு தீா்த்தம் வினியோகம் செய்யப்பட்டது. இதில் நூற்றுக்கணக்கான பக்தா்கள் கலந்துக்கொண்டு ராமானுஜா் மற்றும் ஆதிகேசவபெருமாளை வணங்கி சென்றனா். இதையடுத்து இரவு 7 மணிக்கு ஜீயா் தோப்பு மண்டபத்தில் இருந்து கோயிலுக்கு சுவாமி புறப்பாடு நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொற்கொன்றை!

மழை வேண்டி இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை!

தனக்குத்தானே பிரசவம்- குழந்தையைக் கொன்ற செவிலியர் கைது

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழைப்பொழிவு விவரம்!

பாஜகவின் இஸ்லாமிய வெறுப்பு... கண்டுகொள்ளாத தேர்தல் ஆணையம்!

SCROLL FOR NEXT