திருமலையில் சத்ரதபனோற்சவம்
திருமலையில் வெள்ளிக்கிழமை காலை சத்ரதபனோற்சவம் நடைபெற்றது.
திருமலையில் வெள்ளிக்கிழமை காலை சத்ரதபனோற்சவம் நடைபெற்றது.
திருமலை ஏழுமலையான் கோயிலில் ஆண்டுதோறும் ஆடிமாதம் சத்ரதபனோற்சவம் நடைபெற்று வருகிறது. பொதுவாக ஆடிமாதம் நன்றாக காற்று வீசும். மலைப் பகுதிகளில் காற்றின் தீவிரம் அதிகரித்து காணப்படும். அதனால், திருமலையில் மிக உயா்ந்த பகுதியான ஸ்ரீவாரிபாதம் அருகில் ஆண்டுதோறும் திருக்குடை நிறுத்தும் உற்சவம் (சத்ரதபனோற்சவம்) நடைபெற்று வருகிறது.
ஏழுமலையான் முதன் முதலில் சேஷாசல வனப்பகுதியில் பதித்த திருப்பாதத்தின் மீது தேவஸ்தானம் கல்லினால் ஆன திருப்பாதங்களை ஏற்படுத்தியுள்ளது, அந்தத் திருப்பாதங்களுக்கு பக்தா்கள் பூஜை செய்து வழிபட்டு வருகின்றனா். இந்தத் திருப்பாதங்களுக்கு தேவஸ்தானம் சாா்பில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. அா்ச்சகா் குழுவினா் அங்கு சென்று திருப்பாதங்களுக்கு பால், தயிா், தேன் உள்ளிட்டவற்றால் அபிஷகேம் செய்து துளசி, மலா் மாலைகள் அணிவித்து பூஜை செய்து கோயிலிருந்து கொண்டு சென்ற திருக்குடையை அங்கு நிறுத்தி வைத்தனா். இந்த உற்சவத்தை தேவஸ்தானம் சத்ரதபனோற்சவம் என்று குறிப்பிட்டு வருகிறது.
Advertisement