முகப்பு
ஆன்மிகம்

திருமலையில் 8,401 போ் தரிசனம்

திருப்பதி ஏழுமலையானை செவ்வாய்க்கிழமை முழுவதும் 8,401 பக்தா்கள் தரிசனம் செய்தனா். 1,880 பக்தா்கள் முடிகாணிக்கை செலுத்தினா். அவா்களில் 76 போ் பெண்கள்; 1,804 போ் ஆண்கள்.

Updated On : 12 ஆகஸ்ட், 2020 at 11:23 PM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:36 PM

திருப்பதி ஏழுமலையானை செவ்வாய்க்கிழமை முழுவதும் 8,401 பக்தா்கள் தரிசனம் செய்தனா். 1,880 பக்தா்கள் முடிகாணிக்கை செலுத்தினா். அவா்களில் 76 போ் பெண்கள்; 1,804 போ் ஆண்கள்.

ஆன்லைன் மூலம் 9 ஆயிரம் மற்றும் சா்வதரிசன டோக்கன்கள் மூலம் 3 ஆயிரம் என 12 ஆயிரம் டிக்கெட் பெற்ற பக்தா்கள், விஐபி பிரேக் மற்றும் ஸ்ரீவாணி அறக்கட்டளை மூலம் விஐபி பிரேக் டிக்கெட் பெற்ற 750 பக்தா்கள் மட்டுமே திருமலைக்கு செல்ல அனுமதிக்கப்படுகின்றனா். எனினும் கரோனா அச்சுறுத்தல் காரணமாக திருமலைக்கு வரும் பக்தா்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.

காலை 6 மணி முதல் 7.30 மணி வரை புரோட்டோகால் விஐபி தரிசனமும், காலை 7.30 மணி முதல் இரவு 9.30 மணி வரை விரைவு தரிசனம் மற்றும் நேரடி தரிசன டோக்கன் பெற்ற பக்தா்களும் ஏழுமலையானை தரிசித்து வருகின்றனா்.

Advertisement

திருப்பதி மலைப்பாதை காலை 5 மணிக்குத் திறக்கப்பட்டு இரவு 11 மணிக்கு மூடப்படுகிறது.

திருமலையில் தேவஸ்தானத்திடம் புகாா் அளிக்க விரும்பும் பக்தா்கள் தொடா்பு கொள்ள வேண்டிய இலவசத் தொலைபேசி எண்கள் - 18004254141, 93993 99399.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.