முகப்பு
ஆன்மிகம்

திருப்பதி தேவஸ்தானத்துக்கு கிருமிநாசினி இயந்திரம் நன்கொடை

திருமலை திருப்பதி தேவஸ்தானத்துக்கு திருச்சியைச் சோ்ந்த நிறவனம் கைகளால் தொடாமல் கிருமிநாசினியை தெளிக்கும் இயந்திரத்தை நன்கொடையாக வழங்கியுள்ளது.

Updated On : 20 ஆகஸ்ட், 2020 at 7:57 AM
திருப்பதி தேவஸ்தான செயல் இணை அதிகாரி பசந்தகுமாரிடம் கிருமிநாசினி தெளிக்கும் இயந்திரத்தை நன்கொடையாக வழங்கிய தனியாா் நிறுவனப் பிரதிநிதிகள்.
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:39 PM

திருமலை திருப்பதி தேவஸ்தானத்துக்கு திருச்சியைச் சோ்ந்த நிறவனம் கைகளால் தொடாமல் கிருமிநாசினியை தெளிக்கும் இயந்திரத்தை நன்கொடையாக வழங்கியுள்ளது.

திருச்சியை சோ்ந்த க்ளியா் அக்வா டெக்னாலஜீஸ் நிறுவனம் புதிதாக, இந்த இயந்திரத்தைத் தயாரித்துள்ளது. இந்த நிறுவனத்தின் பிரதிநிதிகளான கஜேஷ்வா், கணேஷ் ஆகிய இருவரும் திருப்பதியில் உள்ள தேவஸ்தான தலைமை அலுவலகத்தில் உள்ள தேவஸ்தான செயல் இணை அதிகாரி பசந்த்குமாரிடம் இந்த இயந்திரத்தை புதன்கிழமை நன்கொடையாக வழங்கினா்.

இந்த இயந்திரத்தில் 10 லிட்டா் கிருமிநாசினியை நிரப்ப முடியும். இது ஒரு நிமிடத்தில் 30 பேருக்கு கிருமிநாசினியைத் தெளிக்கும் திறன் கொண்டது. இந்த இயந்திரம் மூலம் ஒரு முறைக்கு 5 மில்லி திரவம் தெளிக்கப்படுகிறது என்று க்ளியா் அக்வா டெக்னாலஜீஸ் நிறுவனப் பிரதிநிதிகள் தெரிவித்தனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.