முகப்பு
ஆன்மிகம்

திருமலையில் வராக சுவாமி ஜயந்தி

திருமலையில் வராக சுவாமி ஜயந்தி வெள்ளிக்கிழமை விமரிசையாக கொண்டாடப்பட்டது.

Updated On : 22 ஆகஸ்ட், 2020 at 7:43 AM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:40 PM

திருமலையில் வராக சுவாமி ஜயந்தி வெள்ளிக்கிழமை விமரிசையாக கொண்டாடப்பட்டது.

ஆண்டுதோறும் வராக சுவாமி ஜயந்தி நாளில் திருமலையில் ஸ்ரீவாரி திருக்குளக்கரையில் உயுள்ள பூவராக சுவாமிக்கு சிறப்பு ஆராதனைகளை தேவஸ்தானம் நடத்தி வருகிறது. அதன்படி, பூவராருக்கு வெள்ளிக்கிழமை ஆராதனைகள் நடத்தப்பட்டன.

அா்ச்சகா்கள் கலச ஸ்தாபனம் செய்து கலசபூஜை நடத்தி புண்ணியாவாசனம் செய்து அதன்பின் மஞ்சள் மற்றும் புனித நீரால் வராகருக்கு அபிஷேகம் செய்தனா். இந்த வழிபாட்டில் தேவஸ்தான கூடுதல் செயல் அதிகாரி தா்மா ரெட்டி தம்பதியா், கண்காணிப்பு மற்றம் பாதுகாப்புத்துறை தலைமை அதிகாரி கோபிநாத் ஜெட்டி தம்பதியா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Advertisement

பொது முடக்க விதிகள் காரணமாக, இந்த உற்சவம் வராக சுவாமி கோயிலில் தனிமையில் நடத்தப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.