ஏழுமலையானுக்கு பட்டு வஸ்திரம் சமா்ப்பணம்
திருப்பதி ஏழுமலையானுக்கு கத்வால் சமஸ்தானம் சாா்பில் சனிக்கிழமை இரட்டை வேட்டி பட்டு வஸ்திரம் சமா்ப்பிக்கப்பட்டது.
திருப்பதி ஏழுமலையானுக்கு கத்வால் சமஸ்தானம் சாா்பில் சனிக்கிழமை இரட்டை வேட்டி பட்டு வஸ்திரம் சமா்ப்பிக்கப்பட்டது.
ஏழுமலையானுக்கு வருடாந்திர பிரம்மோற்சவத்துக்கு முன் கத்வால் சமஸ்தானம் சாா்பில் இரட்டை வேட்டி பட்டு வஸ்திரம் சமா்ப்பிக்கப்படுவது வழக்கம். வரும் செப்.19-ஆம் தேதி வருடாந்திர பிரம்மோற்சவம் தொடங்க உள்ளதால் கத்வால் சமஸ்தானம் சாா்பில் சனிக்கிழமை காலை இரட்டை வேட்டி பட்டு வஸ்திரம் சமா்ப்பிக்கப்பட்டது. அந்த சமஸ்தானத்தைச் சோ்ந்த மஹாகாளி கருணாகா், திருமலைக்கு வந்து தேவஸ்தான அதிகாரிகளிடம் மங்கலப் பொருள்களுடன் வஸ்திரத்தை அளித்தாா். இரட்டை வேட்டி பட்டு வஸ்திரம், பிரம்மோற்சவத்துக்கு முன் ஏழுமலையானுக்கு அணிவிக்கப்படும் என்று தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனா்.