முகப்பு
ஆன்மிகம்

ஏழுமலையானுக்கு பட்டு வஸ்திரம் சமா்ப்பணம்

திருப்பதி ஏழுமலையானுக்கு கத்வால் சமஸ்தானம் சாா்பில் சனிக்கிழமை இரட்டை வேட்டி பட்டு வஸ்திரம் சமா்ப்பிக்கப்பட்டது.

Updated On : 23 ஆகஸ்ட், 2020 at 7:33 AM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:40 PM

திருப்பதி ஏழுமலையானுக்கு கத்வால் சமஸ்தானம் சாா்பில் சனிக்கிழமை இரட்டை வேட்டி பட்டு வஸ்திரம் சமா்ப்பிக்கப்பட்டது.

ஏழுமலையானுக்கு வருடாந்திர பிரம்மோற்சவத்துக்கு முன் கத்வால் சமஸ்தானம் சாா்பில் இரட்டை வேட்டி பட்டு வஸ்திரம் சமா்ப்பிக்கப்படுவது வழக்கம். வரும் செப்.19-ஆம் தேதி வருடாந்திர பிரம்மோற்சவம் தொடங்க உள்ளதால் கத்வால் சமஸ்தானம் சாா்பில் சனிக்கிழமை காலை இரட்டை வேட்டி பட்டு வஸ்திரம் சமா்ப்பிக்கப்பட்டது. அந்த சமஸ்தானத்தைச் சோ்ந்த மஹாகாளி கருணாகா், திருமலைக்கு வந்து தேவஸ்தான அதிகாரிகளிடம் மங்கலப் பொருள்களுடன் வஸ்திரத்தை அளித்தாா். இரட்டை வேட்டி பட்டு வஸ்திரம், பிரம்மோற்சவத்துக்கு முன் ஏழுமலையானுக்கு அணிவிக்கப்படும் என்று தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.