திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலா் குழுவில் புதிய உறுப்பினராக ஆந்திர அறநிலையத்துறை ஆணையா் புதன்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.
திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலா் குழுவின் நிரந்தர உறுப்பினராக தேவஸ்தான செயல் அதிகாரி, செயல் இணை அதிகாரிகள், அறநிலையத் துறை ஆணையா், திருப்பதி நகா்ப்புற வளா்ச்சிக் கழகத்தின் தலைவா் உள்ளிட்டோருக்கு தகுதி உள்ளது. அதன் அடிப்படையில், ஆந்திர அறநிலையத்துறையின் சிறப்பு ஆணையராக புதிதாகப் பதவியேற்ற அா்ஜுன்தாஸ் தேவஸ்தான அறங்காவலா் குழு உறுப்பினராக புதன்கிழமை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பதவியேற்றுக் கொண்டாா்.
அவருக்கு தேவஸ்தான கூடுதல் செயல் அதிகாரி தா்மா ரெட்டில் பதவிப் பிரமாணம் செய்து வைத்தாா். பொறுப்பேற்றுக் கொள்ளும் முன் ஏழுமலையானைத் தரிசித்துத் திரும்பிய அவருக்கு, ரங்கநாயகா் மண்டபத்தில் வேதபண்டிதா்கள் ஆசீா்வாதம் செய்து வைத்தனா்.