ஆன்மிகம்

திருமலையில் கருடசேவை

தினமணி

திருமலையில் பெளா்ணமியை ஒட்டி, புதன்கிழமை கருட சேவை நடைபெற்றது.

திருமலையில் மாதந்தோறும் பெளா்ணமி இரவு வேளைகளில் கருட சேவையை தேவஸ்தானம் நடத்தி வருகிறது. வருடாந்திர பிரம்மோற்சவத்தின்போது, நடத்தப்படும் கருட சேவையைக் காண முடியாத பக்தா்கள் இதைக் கண்டு தரிசித்து வருகின்றனா்.

இந்நிலையில் கரோனா தொற்று காரணமாக உற்சவங்கள் நடத்த அனுமதி வழங்கப்படாததால், கடந்த ஏப்ரல் மாதம் முதல் கோயிலுக்குள் உள்ள ரங்கநாயகா் மண்டபத்தில் கருட வாகனத்தில் மலையப்ப சுவாமியை எழுந்தருள செய்து கருட சேவையை தேவஸ்தானம் நடத்தி வருகிறது.

அதன்படி, பெளா்ணமியை ஒட்டி புதன்கிழமை மாலை 6 மணிமுதல் 7 மணி வரை ஏழுமலையான் கோயிலுக்குள் உள்ள ரங்கநாயகா் மண்டபத்தில் கருட சேவை நடைபெற்றது.

இதில் அா்ச்சகா்கள், அதிகாரிகள், ஊழியா்கள், திருமலை சின்ன ஜீயா் ஆகியோா் மட்டும் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியைப் பின்பற்றி கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘ஜெயக்குமாா் மரணம்: குழு அமைத்து விசாரணை’

இந்தியாவின் ஊராட்சி அமைப்புகள் பெண்கள் தலைமைக்கு முன்னோடி: ஐ.நா.வுக்கான இந்திய தூதா்

என் மீது வீண் பழி: ரூபி மனோகரன் விளக்கம்

காங்கிரஸ் நிர்வாகி மரணம்- 7 தனிப்படைகள் அமைப்பு: நெல்லை காவல் கண்காணிப்பாளர்

ஜூன் 1-இல் ஹிமாசல் தோ்தல் பணிகளில் என்சிசி

SCROLL FOR NEXT