பூந்தமல்லி -தண்டலம் கூட்ரோடிலிருந்து பேரம்பாக்கம் செல்லும் வழியில் 5 கி.மீ தூரத்தில் உள்ளது நயப்பாக்கம். இங்குள்ள அருள்மிகு நேத்ரதாயினி சமேத மாசிலாமணீஸ்வரர் திருக்கோயில் சுமார் 2000 வருடங்கள் பழைமையானது.
பல வருடங்களுக்குப் பிறகு மிகவும் சிதிலமடைந்து வழிபாடு குன்றிய நிலையில் இருந்த இவ்வாலயத்தை அண்ணாமலையார் அறப்பணிக்குழு (சென்னை) என்ற அமைப்பின் மூலம் புணருத்தாரணம் செய்யப்பட்டு முற்றிலும் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜூலை 2017 - இல் குடமுழுக்கு நடந்தேறியது. இவ்வாலயத்தில் இஷ்டகாம்ய சித்தி முத்திரையில் ஸ்ரீ காஞ்சிமகா சுவாமிகள் அர்த்தமண்டபத்தில் சந்நிதி கொண்டுள்ளது சிறப்பு. ஸம்வத்ஸராபிஷேகம், ஹோமங்கள் மற்றும் பூஜைகளுடன் ஜூன் 25 -இல் நடைபெறுகின்றது.
தொடர்புக்கு: 98840 80543 / 94436 42043.