திருப்பதி ஏழுமலையானை நடிகை சமந்தா வழிபட்டார்.
ஏழுமலையானை வழிபடுவதற்காக நடிகை சமந்தா வியாழக்கிழமை இரவு திருமலைக்கு வந்தார். இரவு திருமலையில் தங்கிய அவர், வெள்ளிக்கிழமை காலை விஐபி பிரேக் தரிசனத்தில் ஏழுமலையானைத் தரிசித்தார்.
தரிசனம் முடித்து திரும்பிய அவருக்கு தேவஸ்தான அதிகாரிகள் சிறப்பு பிரசாதங்களை வழங்கினர். மேலும், கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக், ஆந்திர பெண்கள் நலத்துறை அமைச்சர் பரிடால சுனிதா உள்ளிட்டோரும் விஐபி பிரேக் தரிசனத்தில் ஏழுமலையானை வழிபட்டனர்.