அகத்தீஸ்வரர் கோயிலில் நடைபெற்ற கும்பாபிஷேகம். (வலது) விழாவில் கலந்து கொண்ட பக்தர்கள் கூட்டத்தின் ஒரு பகுதியினர். 
செய்திகள்

புத்திரன்கோட்டை அகத்தீஸ்வரர் கோயிலில் கும்பாபிஷேகம்

மதுராந்தகத்தை அடுத்த புத்திரன்கோட்டை முத்தாம்பிகை சமேத அகத்தீஸ்வரர் கோயிலில் மகா கும்பாபிஷகம் வியாழக்கிழமை நடைபெற்றது. 

DIN

மதுராந்தகத்தை அடுத்த புத்திரன்கோட்டை முத்தாம்பிகை சமேத அகத்தீஸ்வரர் கோயிலில் மகா கும்பாபிஷகம் வியாழக்கிழமை நடைபெற்றது. 
செய்யூர் வட்டம், புத்திரன்கோட்டை கிராமத்தில் உள்ள பழைமைவாய்ந்த இக்கோயிலில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை மகா சங்கல்பம், கணபதி ஹோமம், சுமங்கலி பூஜை, கன்யா பூஜை உள்ளிட்டவையும், புதன்கிழமை சிறப்பு பூஜைகளும் நடைபெற்றன. வியாழக்கிழமை காலை மேளதாளங்கள், வாண வேடிக்கைகள் முழங்க, யாக சாலையில் இருந்து கலசப் புறப்பாடும், இதையடுத்து மகா கும்பாபிஷேகமும் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து கருவறை மூலவர் சந்நிதிகளில், புனிதநீர் ஊற்றப்பட்டது. பின்னர் மகா தீபாராதனை நடைபெற்றது.
நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன், காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கி இயக்குநர் திருக்கழுகுன்றம் எஸ்.ஆறுமுகம், இந்து சமய அறநிலைய இணை ஆணையர் க.பெ.அசோக்குமார், உதவி ஆணையர் க.ரமணி, கோயில் செயல் அலுவலர் சோ.செந்தில்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கண் கனா... ரணாவத்!

கரூர் வழக்கு சிபிஐக்கு மாற்றியதில் மகிழ்ச்சி: அண்ணாமலை

இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் முடிந்தது: டிரம்ப்

பிக் பாஸ் வீட்டுக்குள் மீண்டும் ஆயிஷா! வைல்டு கார்டு என்ட்ரி!

முல்லைப் பெரியாறு அணைக்கு வெடிகுண்டு மிரட்டல்

SCROLL FOR NEXT